Wednesday, April 02, 2008

உயிர் பிச்சை அல்ல.. மறுக்கப்பட்ட நீதி...


தமிழக வரலாறு தெரிந்தவர்கள் ராஜிவ் காந்தி கொலையையும் அதற்கான தார்மீக காரணங்களை அறிந்திருப்பீர்கள். உண்மையான குற்றவாளிகளை இன்னும் சரியாக கண்டு கொள்ள முடியாத இந்திய புலனாய்வு படையின் லட்சனைதையும், குளறுபடிகளையும் அறிந்திருப்பீர்கள். அந்த குளறுபடியின் குட்டையில் சிக்கி தன் வாழ்வை இழந்தவர் தான் அண்ணன் பேரறிவாளன். 16 வருடமாக நீதிகாக அவரும், அவர் தாய் அற்புதம் அம்மாளும் போராடி கொண்டிருக்கிறார்.
தொடரும் தவிப்பு என்ற நாவல் மூலமாக தூக்கு மர நிழலில் நிற்கும் தன் மகனை மீட்கப் போராடும் அந்த அற்புத தாயின் உண்மைத்தவிப்பை பற்றி தென்செய்தி ஆசிரியர் பூங்குழலி உண்மையாய் விவரித்திருந்தார். (புத்தகம் வாங்க இங்கே சொடுக்கவும்). தமிழ் பற்றை, இன பற்றை தன் மகனுக்கு ஊட்டிய ஒரே காரணத்துக்காக அல்லல் படும், தவிக்கும் அந்த தாயின் நிலைமை யாருகே வரக்கூடாத ஒன்று...

அண்ணன் பேரறிவாளனின் வலைப்பூவை சமிபத்தில் என் சகோதரர் வழக்கறிஞர் பிரபு மூலமாக காண நேர்ந்தது. அதில் தன் நிலையை விளக்கி அவர் எழுதிய கடிதம் தான் "உயிர் பிச்சை அல்ல.. மறுக்கப்பட்ட நீதி...". உணர்வுள்ள தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய வலைப்பூ, கடிதம்.

தமிழனாய், தமிழ் உணர்வுள்ளவராய் பிறந்த ஒரே காரணத்துக்காக அண்ணன் பேரறிவாளன் அவர்களுக்கு மறுக்கபட்ட நீதி வெகு சீக்கிரம் மீண்டும் கிடைக்க வாழ்த்தி... நாம்மால் ஆனா உதவி செய்வோம்.
வாழ்க அண்ணன் பேரறிவாளன்...

0 comments: