Monday, March 31, 2008

தவறு செய்த "கனியன்"... தவறு செய்யும் "கருணாநிதி"...

பெங்களூர்:ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தை நிச்சயம் நிறைவேற்றுவோம் என்று முதல்வர் கருணாநிதி கூறியிருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெங்களூரில் இன்று வன்முறை மூண்டது. தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட இரு தியேட்டர்கள் சூறையாடப்பட்டன.ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து

வரும் கன்னட அமைப்புகள், ஓகனேக்கல் கர்நாடக்ததிற்குச் சொந்தமானது என்றும் வீம்பாக பேசி வருகின்றனர்.மேலும் ஏப்ரல் 9ம் தேதிக்குள் ஓகனேக்கல் திட்டத்தைக் கைவிட வேண்டும். இல்லாவிட்டால் தமிழக பேருந்துகளை தடுத்து நிறுத்துவோம், தமிழ்ப் படங்களை திரையிட விட மாட்டோம். தமிழ் டிவி சானல்களும் இருட்டடிப்பு செய்யப்படும் என கன்னட ரக்சன வேதிகே என்கிற கன்னட வெறியர் அமைப்பு எச்சரித்துள்ளது.

இதற்கு நேற்று சென்னையில் நடந்த பாலம் திறப்பு விழாவில் முதல்வர் கருணாநிதி கண்டனம் தெரிவித்தார். மத்திய அரசு உடனடியாக தலையிட்டு இந்திய இறையாண்மையைக் காக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். மேலும் ஓகனேக்கல் திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும் என்றும் அவர் உறுதியாக தெரிவித்தார்.இதையடுத்து கன்னட ரக்ஷன வேதிகே அமைப்பினர் இன்று பெங்களூரில் வன்முறையில் குதித்தனர். சேஷாத்ரிபுரம் பகுதியில் குவிந்த அவர்கள் அங்குள்ள நடராஜ் மற்றும் வினாயக் ஆகிய தியேட்டர்கள் மீது தாக்குதல் நடத்தினர்.இந்த தியேட்டர்களில் தமிழ்ப் படங்கள் திரையிடப்பட்ட தியேட்டர்களுக்குள் புகுந்த கும்பல் அங்கிருந்த கண்ணாடி ஷோ கேஸ்களை அடித்து உடைத்தனர்.

தியேட்டர் இருக்கைகளையும் கிழித்தெறிந்தனர்.பின்னர் அருகில் உள்ள கடைகளுக்குள் புகுந்த அக்கும்பல் அங்கு தமிழர்கள் வைத்துள்ள கடைகளையும் தாக்கி சேதப்படுத்தி விட்டு தப்பிச் சென்றனர்.இந்த சம்பவத்தால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது. சேஷாத்ரிபுரம் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல, தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்

நன்றி - தட்ஸ்தமிழ்.com

"யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று எவ்வளவு தவறான வார்த்தைகளை நம் முப்பாட்டன் கனியன் பூங்குன்றனார் கூறிவிட்டு சென்றிருக்கிறார். அதுவும் தமிழனிடம் சொல்லிருக்க கூடாத வார்தைகள். இந்தியா தேசியம் என்று கூறி திரியும் ஒட்டு பொறுக்கிகளின், ஏமாற்று பேர்வழிகளின் வார்தைகள் அது. இந்தியா தேசியத்துக்குள் இருந்து கொண்டே ஒருவன் தமிழகத்தில் இருந்து வரும் பேருந்துகளை உள்ள விட முடியாது என்று கூறி அவற்றை சிறை வைத்து, அடித்து நாசம் பண்ணுகிறான், குடிக்க தண்ணி எடுக்க கூடாதுன்னு சொல்லி பந்த் நடத்துறான்... அப்புறம் என்ன தேசியம், யாதும் ஊரே...மண்ணாங்கட்டி...
தமிழ் திரைப்படத்தை கூட திரை இட முடியாத நிலைமையில் மாற்ற மாநிலங்களில் இருக்கையில் தமிழ்நாட்டில் எந்த மாநிலத்து ஆட்கள் வேணாலும் முதலமைச்சர் கூட ஆகலாம் என்கிற நிலைமை அவன் இளிச்சவாய் தனத்துக்கு ஒரு எடுத்துக்காட்டு. அதை விட கொடுமை அதை பெருமையாய் வேற பேசி திரிவான் தமிழன் (அம்புட்டு நல்லவனா இருக்கான்...).


இறையாண்மை என்ற சொல்லை யாரவது பேசி கேட்டால் சமீபகாலமாக எனக்கு பயங்கர கோபம் வருகிறது. கடைசியா என் கோபத்திற்கு இலக்காகி இருப்பவர் நம்ம முதல்வர். சென்னையில் பாலம் திறப்பு விழா நிகழ்ச்சியில் அந்த வார்த்தையை சொல்லி கெஞ்சி கூத்தாடி இருக்காரு கன்னடத்து வெறியர்களிடம். தமிழனுக்கும் இறையாண்மைக்கும் ஏழாம் பொருத்தம் தான். இலங்கை இறையாண்மைகாக அங்க இருக்க தமிழன் அடிபடனும், இந்தியா இறையாண்மைகாக இங்க இருக்க தமிழன் அடிபடனும் என்று விதி இருக்கு போல. மும்பையில் அடிவாங்குனாலும், கர்நாடகாவில் அடிவாங்கினாலும் இந்தியா இறையாண்மைகாக வாயை போத்திகிட்டு இருக்கணும் தமிழன்.


முதல்வரே, திராவிடத்தின் கடைசி நம்பிக்கையே,


ராமேஸ்வரம் தமிழர்கள் இலங்கை கடற்படையால் சுட படும் போது எங்கே போனது இந்தியாவின் இறையாண்மை? காவேரி தண்ணீர் பிரச்சனையில் பேருந்தோடு தமிழர்கள் மூவர் எரிக்கப்பட்ட போது எங்க போனது இந்தியா இறையாண்மை?. எத்தனை நாள் தான் இந்த இறையாண்மையை காரணம் காட்டி தமிழர்களை காவு கொடுப்பதாய் உத்தேசம். போதும் நாம் கெஞ்சியது செயலில் இறங்கினால் ஒழிய கன்னடியர்கள் கொட்டம் அடங்காது...

Thursday, March 27, 2008

பச்சை தமிழ் வீர(ப்ப)ன்...

கர்நாடக தமிழர்களின் பாதுகாவலனாக, சந்தனகட்டு மக்களின் காவல் தெய்வமாக வாழ்ந்த, காவேரி தண்ணீர் துறந்துவிடவில்லை என்றால் கர்நாடகா ஆணைகளுக்கு குண்டுவைப்பேன் என கூறிய பச்சை தமிழனின் உண்மை வரலாறை உலகுக்கு தெரியப்படுத்தும் மக்கள் தொலைக்காட்சிக்கு நன்றிகள்.... அந்த வீரனோடு பொதிந்து போன பல உண்மைகளையும் வெளி கொணர்ந்தால் நாட்டுக்குள்ளே நல்லவர்களாய் நடமாடும் பல கொள்ளை கும்பலின் முகத்திரைகள் கிழியும்...

Wednesday, March 26, 2008

நல்ல தொடக்கம்...

விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து படம் எடுத்துள்ள சிங்கள இயக்குநரைக் கண்டித்து சென்னையில் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது இயக்குநருக்கு சரமாரியாக அடி, உதை விழுந்தது.


இலங்கையைச் சேர்ந்த துஷாரா பெரீஸ் என்பவர் பிரபாகரன் என்ற பெயரில் விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்துப் படம் எடுத்துள்ளார். இப்படத்தை சிங்களத்தில் எடுத்துள்ள அவர், படத்தின் இறுதிக் கட்ட வேலைகள் மற்றும் பிரிண்ட் போடுவதற்காக சென்னைக்கு வந்துள்ளார்.கே.கே.நகரில் உள்ள ஜெமினி கலர் லேபில் பிரிண்ட் போடும் பணி நடந்து வருகிறது. இந்தத் தகவல் தமிழர் அமைப்புகளைச் சேர்ந்தவர்களுக்குத் தெரிய வந்தது. இதையடுதது திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் சுப.வீரபாண்டியன், இயக்குநர் சீமான், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி செய்தித் தொடர்பாளர் வன்னியரசு உள்ளிட்டோர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் ஜெமினி லேபுக்கு விரைந்தனர்.லேபுக்கு முன்பு கூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பிரபாகரன் பட பிரிண்ட் போடும் பணியை நிறுத்த வேண்டும் என்று கோரி கோஷமிட்டனர். இதையடுத்து இயக்குநர் பெரீஸ், தமிழர் அமைப்பினரை சமாதானப்படுத்துவதற்காக வெளியே வந்தார்.அப்போது கூட்டத்தில் இருந்த சிலர் பெரீஸ் மீது பாய்ந்து அவரை சரமாரியாக அடித்து உதைத்தனர். இதனால் பெரீஸ் அதி்ர்ச்சி அடைந்தார். அங்கு பரபரப்பு ஏற்பட்டது.தகவல் அறிந்ததும் போலீஸார் விரைந்து வந்தனர். தமிழர் அமைப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.


இதையடுத்து வருகிற 27ம் தேதி பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் ஆகியோருக்குப் படத்தைப் போட்டுக் காட்டுவது, அவர்களுக்கு ஆட்சேபனை இல்லை என்றால் பிரிண்ட் போட்டுக் கொடுத்து இலங்கைக்கு அனுப்புவது என்ற முடிவுக்கு அனைவரும் வந்தனர்.இதையடுத்து வருகிற 27ம் தேதி பிரபாகரன் படத்தை ராமதாஸும், திருமாவளவனும் பார்க்கவுள்ளனர். தமிழ் சப்-டைட்டிலுடன் படம் காட்டப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தப் படத்தில் பிரபாகரன், தமிழர்களின் போராட்டம் குறித்து தவறான முறையில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கருத்து பரவியுள்ளது.


நன்றி - தட்ஸ்தமிழ்.காம்


இந்த செய்தி படித்த உடனே எனக்கு மலையாளபட இயக்குனர்கள் நியாபகம் வருகிறார்கள். முக்காவாசி மலையாள படத்துல தமிழனை கேலிக்குரிய கதாபாத்திரமா, மொள்ளமாரியா, திருடனா காட்டுவதை வழக்கமாகவே கொண்டிருக்கிறார்கள். படங்களை உற்று நோக்கினால் தெரியும்.

மம்முட்டி படங்களில் ஆரம்பித்து பல படங்களை என்னால் சொல்ல முடியும். ஒரு தப்பான காவல்துறை அதிகாரியா இருப்பவர் என்றால் அவர் தமிழ்தான் பேசுவார், கதாநாயகன் முதல் காட்சியில் தோன்றி அநியாயத்தை தட்டி கேட்பார் என்றால் அந்த இடத்தில் அநியாயம் செய்பவர் தமிழ் பேசுவார், வில்லனோட சேர்ந்து இருந்து கடைசியில் வில்லனுகே துரோகம் செய்பவரா, அவர் தமிழ் பேசுபவராய் இருப்பார் (கடைசியில் வில்லன் கையாலே சாவார்). இப்படி தமிழ் பேசுகிற ஒருவன் பட திரையில் தோன்றினலே அது மரியாதை குரிய பாத்திரமாய் இருக்காது என அடித்து சொல்லி விடலாம். எல்லாம் அவர்கள் தமிழர்கர் மீது வைத்துள்ள வஞ்சகத்தின் வெளிப்பாடு. அப்படி எடுக்கப்படுகிற முக்கால்வாசி படத்துக்கு சென்னையில் தான் அச்சிடும், கடைசிகட்ட ஒலிப்பதிவு வேலைகள் நடைபெறுகிறது என்பது நிதர்சனம்.

சிங்கள இயக்குனருக்கு நம் தோழர்கள் அருமையாய் "கண்டனம்" தெரிவத்தது போல் தமிழனையே கேவலமாய் சித்தரிக்கும் மலையாள பட இயக்குனர் பெருமக்களுக்கும் "கண்டனம்" தெரிவிக்க வேண்டும். நம்ம ஊருகுள்ளவே வந்து நம்மவரை பற்றி தவறாக படம் எடுக்கும் எல்லா புறம்போக்குக்கும் இது ஒரு எச்சரிக்கையாய் அமையவேண்டும். நாம் இதுவரை அமைதியாய் இருந்து பண்ணிய தவறை திருத்த ஆரம்பித்த நல்ல தொடக்கம் இந்த அடி.

Monday, March 24, 2008

நெருப்பின் உருவம்...

நெருப்பின் உருவத்தை பார்க்க வேண்டுமா?... வீரத்தின் குரலை கேட்க வேண்டுமா?... புரட்சியின் பிம்பத்தை காணவேண்டுமா?...

Sunday, March 23, 2008

எரியும் கொள்ளிக்கு எண்ணையா???

தமிழ்நாட்டிலிருந்து மின்சாரத்தைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை நடத்த தமது தலைமையிலான குழு விரைவில் இந்தியாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ளதாக சிறிலங்காவின் மின்துறை அமைச்சர் ஜோன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார்.


"கடலுக்கடியில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடியதான பல மில்லியன் ரூபாய் மதிப்பிலான பாரிய திட்டத்துக்கு சிறிலங்கா அரசு முன்னுரிமை கொடுத்திருக்கிறது. இத்திட்டத்துக்கான சாத்தியக்கூறுகள் தொடர்பிலான முதல்நிலை அறிக்கை தயாரிக்கும் பணி முடிவடைந்துள்ளது. இது தொடர்பில் விவாதிக்க எனது தலைமையிலான குழு இந்தியாவுக்குச் செல்ல உள்ளது" என்றார் அவர்.


கடலுக்கடியிலான கேபிள் மூலம் 200 கிலோ மீற்றர் நீளத்துக்கு சிறிலங்காவின் அனுராதபுரம் மற்றும் தமிழர் பிரதேசங்களான மன்னார், தலைமன்னார் வழியாக தமிழ்நாட்டின் மதுரையை இணைத்து மின்சாரத்தைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசு திட்டமிட்டுள்ளதாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. இத்திட்டமானது ரூ. 450 மில்லியன் டொலர் மதிப்பிலானது என்றும் கூறப்படுகிறது.


சிறிலங்காவின் நுரைச்சோலை மற்றும் திருகோணமலை அனல் மின் திட்டங்கள் முடிவடைய 2011 ஆம் ஆண்டு ஆகும் என்பதால் அதுவரையில் இந்தியாவிடமிருந்து மின்சாரத்தைப் பெற சிறிலங்கா முடிவு செய்துள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய தாயகப் பிரதேசமான திருகோணமலையில் தமிழ் மக்களை பலவந்தமாக வெளியேற்றிவிட்டு மக்கள் வாழ்விடங்களில் அனல் மின் திட்டத்தை இந்தியாவின் உதவியுடன் சிறிலங்கா செயற்படுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி - புதினம்.காம்

"பிச்சை எடுத்தானாம் பெருமாளு அதை புடிங்கி திண்ணானாம் அனுமாரு" ன்னு ஒரு பழமொழி இருக்குல நம்ம ஊர்ல அது இந்த செய்திக்கு கரெக்டா பொருந்தும்...
போன வருசத்தை விட இந்த வருஷம் மண்ணெண்ணெய், விசிறி விற்பனை மின்சார பற்றாகுறையல கூடிருக்குனு தமிழ்நாட்டுல ஒரு கணக்கு சொல்லுது. முன்னாள் முதல்வரும், இந்நாள் முதல்வரும் நீதான் காரணம், நான் தான் காரணம்னு அறிக்கை சண்டை நடந்துகிட்டு இருக்கு, இதுக்கு நடுல எல்லா தொழிற்சாலைகளுக்கும் ஒரு நாள் லீவு விட்டு மின்சாரத சேமிக்க திட்டம் போற்றுகாங்க (ஒரே பிரோஜானம் அந்த ஒருநாள் எல்லா தொழிலாளர்களும் வீட்டில் உட்காந்து விசிறி குட்சியால் முதுகை சொரிந்து கொள்ளலாம்). இதெல்லாம் விட பெரிய விஷயம் மின்சார பற்றாகுறைய போக்க மேற்கு வங்காளத்தில் இருந்து மின்சாரம் கடன் (பிச்சை) வாங்க போறதா நம்ம 'டினோசர்' வீராசாமி மன்னிக்க 'ஆற்காடு' வீராசாமி சொல்லி இருக்கார். லட்சணம் இப்படி இருக்கைல மேல இருக்க செய்தியை படிச்சா உடனே சிரிப்பதா இல்லை அழுவதானு தெரியல... தமிழ்நாட்டுல இருக்கவனுகே கோமணத்தை காணோம் இதுல அவன் நம்மட்ட கோட் சூட் கேட்டு வர்றான்.

இத விட பெரிய கொடுமை தமிழனை அழிக்க தமிழ்நாட்டுல இருந்து மின்சாரம் மின்சாரம் கேக்குறது... தமிழ்நாட்டு தமிழனின் கையாலாகத தனத்தால இந்த மாறி பேச்செல்லாம் கேக்கவேண்டியது இருக்கு... தமிழ் உணர்வும் இன உணர்வும் இருந்திருந்தால் இந்நேரம் அவன் இப்படி தைரியமா வந்து கேட்ருக்க முடியமா?..


என்னைக்கு தமிழா உனக்கு இன உணர்வும், மொழி பற்றும் வர போகுது?...

Saturday, March 22, 2008

ஜானி - ஒரு திரைக்கவிதை...



வேலைகள் அற்ற, நேரமே சுமையாய் போன ஒரு மாலை பொழுதை போக்குவதற்காக எதாவது படம் பாக்கலாம் என இணையத்தை துலாவியபோது சிக்கியது 'ஜானி'.. நான் பல தடவை பார்த்தும் சலிக்காத படம்... ஒவ்வொரு முறை காணும் போதும் முதல் தடவை பார்த்த போது எப்படி என்னை ஈர்ததோ, தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதே போல் இன்னும் ஈர்க்கிறது... ஒரு கவிதைக்கான நேர்த்தியுடன் வடிவமைத்திருக்கிறார் மகேந்திரன். உணர்வுகளை வார்த்தையாக்கி தோரணமிட்டு உருவாகிய காதல் கவிதை படித்த திருப்தி வருகிறது இப்படம் பார்த்த பின்.

இரு அழகான காதலியல் படம் முழுக்க வியாபதிருக்கும், ஒன்று அர்ச்சனா கொண்டது மற்றொன்று வித்யாசாகர் கொண்டது.. தன் காதலன் தவறானவன் என தெரிந்தும் மாசு மறுவற்ற அன்பை அளிக்கும் அர்ச்சனா... கொலை செய்து தலைமறைவில் இருக்கும் காதலனிடம் "இன்னும் எவ்ளோ நேரம் உங்களிடம் பேச போறேன், தயவுசெய்து பேசுங்கள்" என கெஞ்சும் காதல் அவளுடையது. சரி, தவறு என்பதற்க்கேல்லாம் அப்பாற்பட்டு தன் காதலனை அப்படியே ஏற்றுக்கொள்ளும் காதல் அது. காதலின் துரோகத்தை தாளாமல் தன் காதலியை கொலை செய்யும் வித்யாசாகர். தான் நேசிக்கும் தொழிலை காட்டியும், பணதாசையலும் மனம் மாறும் காதலிக்கு அதே காதலின் தீவிரத்தால் மரணத்தை பரிசாக்குகிறான். காதலின் வலி அவனை கொலைகாரன் ஆக்குகிறது.

இதனூடே, ஜானி தலைமறைவாய் இருக்கும் இடத்தில் அந்த மலைவாழ் பெண்ணுக்கு அவன் மேல் உண்டாகும் திடீர் நேசம். ஜானியின் தாய்,தந்தைக்குமிடையே உள்ள உலகம் அறியா காதல். ஜெயமாலினி மேல் அந்த தெலுங்கர் கொண்டிருக்கும் காம காதல் என மாறுபட்ட பல காதல்களால் பின்னபட்டிருக்கும் படம்.

முக்கியமாக குறிப்பிட வேண்டிய இன்னொன்று படம் முழுக்க ஆக்கிரமித்திருக்கும் இளையராஜாவின் இசை. படம் பார்பவர்களை கதைக்குள் முழுமையாக இழுக்க துணை நிர்ப்பதுதான் பின்னணி இசை. அதை இந்தப்படத்தின் பின்னணி இசை செவ்வனே செய்கிறது. இளையராஜாவின் உச்சம் இந்த படத்தின் இசைதான் என நான் சொல்வேன்.

படத்தின் இழையோடும் கவிதை தன்மையை அறிந்துகொள்வதற்கு அர்ச்சனா தன் காதலை சொல்லும் காட்சியே உதாரணம். நான் மிகவும் ரசித்த காட்சி..

கருநாடகத்தில் தமிழர் கிராமங்களுக்கு பேருந்துகள் நிறுத்தப்பட்டன!! - கன்னடரைக் குடியமர்த்தத் திட்டம்?

கர்நாடக காவிரி கரையோரத்தில் அமைந்துள்ள தமிழர் கிராமங்களுக்கு சென்ற பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. மேலும் தமிழர்களை வெளியேற்றிவிட்டு கன்னடர்களை குடியமர்த்த கன்னட அமைப்பினர் திட்டமிட்டு வருகீன்றனர்.
கர்நாடக மாநில எல்லையில் காவிரி கரையோரத்தில் உள்ள ஜம்புருட்டு, அப்புக்காம்பட்டி, மாறு கொட்டாய் உள்ளிட்ட கிராமங்களில் தமிழர்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள தமிழ்ப் பள்ளிகள் திடீரென்று மூடப்பட்டன. இதனால் தமிழர்களின் குழந்தைகளுக்கு கல்வி கிடைக்காமல் போனது. பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பல்வேறு தமிழ் அமைப்பினர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக தமிழர் கிராமங்களில் மூடப்பட்ட பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.இந்நிலையில் ஓராண்டு முடிவதற்குள் பல காரணங்களைக் கூறி கர்நாடகக் கல்வித்துறை பள்ளிகளை மூடியது. இதனால் இப்பகுதி குழந்தைகள் 10 கி.மீ. தொலைவில் உள்ள கோபிநத்தத்துக்கு பஸ்சில் சென்று படித்து வந்தனர்.இப்போது தமிழர் கிராமங்களுக்கு சென்ற பேருந்துகளையும் கர்நாடக அரசு நிறுத்தி விட்டது. இதனால் குழந்தைகளின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.இதனால் குழந்தைகள் தற்போது ஆடு, மாடுகளை மேய்த்து வருகின்றனர்.
.
காவல்துறையினரும் தமிழர்கள் மீது ஏதாவது புகார் கூறி பணம் பறிக்க முயற்சிக்கின்றனர். போலீசார் கேட்கும் தொகையை கொடுக்காவிட்டால், தீவிரவாதிகளுடன் தொடர்புள்ளதாக கூறி வழக்கு போடுவதாகவும் மிரட்டுகின்றனர்.இப்படியெல்லாம் தொல்லை கொடுத்தால் தாங்களாகவே கிராமத்தை காலி செய்துவிட்டுப் போய்விடுவார்கள். பின்னர் கன்னடர்களை இந்த கிராமங்களில் குடியமர்த்தலாம் என ஒகேனக்கல்லை சொந்தம் எனக் கூறும் கன்னட அமைப்பினர் திட்ட மிட்டுள்ளனர்.
***நன்றி - தென்செய்தி.காம்***

எனக்கு ஒரு சந்தேகம்... கர்நாடக இந்தியாவில் தானே இருக்கிறது?...

Friday, March 21, 2008

புஷ் ஜோக் - பாமரன்


Thursday, March 20, 2008

போற்றபடவேண்டிய 'கௌர்'...

இந்தியன் என்ற ஒரே காரணதுக்குக்காக பாகிஸ்தானில் குற்றவாளியாய் அடைபட்டு, தூக்குமேடை ஏற காத்திருக்கும் சரப்ஜித் சிங்கின் மனைவி சுக்ப்ரீத் கௌர் தன் கணவனின் விடுதலைக்காக எந்த தீவிரவாதியையும் விடுதலை செய்யவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார்.


சபர்ஜித் விடுதலைக்காக நாடாளுமன்ற தாக்குதலுக்கு தலைமை வகித்த அப்சல் குருவை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை பற்றி டைம்ஸ் ஒப் இந்தியா செய்தியாளர்களிடம் பேசுகையில் "என் நாடு என் கணவரின் விடுதலைக்காக கீழ் இறங்கி போய் யாரையும் விடுவிக்க தேவை இல்லை" என்றும் "என் கணவர் போல் இந்தியா சிறைகளில் வாழும் அப்பாவிகளை வேண்டுமென்றால் விடுதலை செய்யலாம் அனால் எந்த தீவிரவதியையும் விடுதலை செய்ய வேண்டாம்" என கூறினார்...


தன் கணவர் விடுதலையை விட நாட்டு நலனுக்காய் பேசிய அந்த வீர மங்கை இருகரம் கூப்பி வணங்க படவேண்டியவர். வீரம் சொரிந்த, தேசப்பற்று மிக்க பஞ்சாப் மண்ணில் பிறந்தவர்கள் நாங்கள் என நிருபித்திருக்கிறார் கௌர். இந்த ஒரு வார்த்தைகவேனும் சபர்ஜிதை விடுவிக்க இந்தியா எல்லா நடவடிக்கை எடுக்க வேண்டும்..

Tuesday, March 18, 2008

ஒபாமாவிற்கு ஒரு சபாஷ்...

உலகின் தலை சிறந்த உரைகளில் பிலடெல்பியாவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் ஒபாமாவின் இந்த உரையையும் சேர்த்துக்கொள்ளலாம்...வரலாறை எடுத்துக்கூறி, தொலைநோக்கு பார்வையுடன், உண்மையை அப்பட்டமாக ஒப்புக்கொண்டு அதே நேரம் அனைவரையும் அரவணைத்து பேசும் பாங்கு மிகவும் பாராட்டத்தக்கது...

வேற்றுமையில் ஒற்றுமை என முழங்கி ஒருமைப்பாடுக்கு எடுத்துக்காட்டு என கூறிக்கொள்ளும் இந்தியாவிலே தேர்தலுக்கு தேர்தல் மதம், சாதி, தனி மாநிலம் என ஒவ்வொரு கட்சியும் பிரிவினை முழக்கமிட்டு ஒட்டு கேட்டு அவை வெற்றியும் பெற்று கொண்டிருக்கும் நிலைமையில் ஒற்றுமையாய் இருக்க ஒட்டு போடுங்கள் என கூறும் ஒபாமாவிற்கு ஒரு சபாஷ்...

Monday, March 17, 2008

வாழ்க அமெரிக்கா....

கொழும்பில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ரணில் விக்கிரமசிங்கே பின்வருமாறு கூறி இருக்கிறார்...
தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போரிடுவதற்கு சிறிலங்கா அரசாங்கத்திற்கு வழங்கிவந்த அனைத்து உதவிகளையும் அமெரிக்க அரசாங்கம் இன்று முற்று முழுதாக நிறுத்தியுள்ளது.
மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம், துணை இராணுவக்குழுவான பிள்ளையானுடன் முறைகேடான தொடர்புகளைப் பேணி வருகின்றது. பிள்ளையான் குழுவினர் சிறார்களைப் படையில் சேர்த்து வருகின்றனர் என்று அமெரிக்கா கூறியிருக்கின்றது. அது மட்டுமன்றி மனித உரிமை மீறல்களிலும் சிறிலங்கா ஈடுபட்டு வருகின்றது.
இந்தப் பின்னணியிலேயே சிறிலங்காவிற்கான அனைத்து இராணுவ உதவிகளையும் அமெரிக்கா நிறுத்தியிருக்கின்றது. இதனால் அமெரிக்காவிடம் இருந்து ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்கான வாய்ப்புக்கள் அனைத்தும் இல்லாமல் செய்யப்பட்டுள்ளன.
உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்காக பிள்ளையான் குழுவினருடன் ஒப்பந்தம் செய்துள்ள அரசாங்கம், பாதுகாப்பு அமைச்சின் ஊடாக பிள்ளையான் குழுவினருக்கு தேவையான நிதியுதவிகளையும் வழங்கி வருகின்றது. கிழக்கில் அரசாங்கம் இரண்டாவது வரதராஜப் பெருமாளை உருவாக்கவே முனைகின்றது என்றார் அவர்.
நன்றி-புதினம்.காம்

பல விசயங்களில் அமெரிக்காவின் அணுகுமுறை தவறானதவே இருக்கும், சில விடயங்கள் வெறுக்கதக்க சுயநலம் கொண்டதவே இருக்கும்... சமீபகாலமாக அதன் சுயநல முடிவுகள் பலருக்கு நன்மை பயப்பதாக உள்ளது மகிழ்ச்சியான செய்தி.. கொசவோவாய் அங்கிகரித்து, வருகிற தேர்தலில் சிறுபான்மையினரை அதிபராக்க முனைவது, தலாய்லாமா வையும் திபெத் பிரச்சனைக்கு அதரவு தருவது போன்றவற்றை சொல்லலாம்...

அது போன்று இபொழுது தமிழர்களை கொள்ள துடிக்கும் இலங்கை அரசுக்கு ராணுவ உதவியை நிறுத்தி இருக்கிறது அமெரிக்கா... வாழ்க அமெரிக்கா...

அமெரிக்காவிற்கு புரிந்தது ஏன் இந்தியாவிற்கு புரியவில்லை?.. இல்லை புரிந்து கொண்டே தமிழர்கள் மீதான அனைத்து அத்துமீறல்களுக்கும் அதரவு அளிக்கிறதா?.. எத்தனை நாள் தான் நாராயணங்களும், கிருஷ்ணன் மேனன்களும் எடுக்கும் தவறான வஞ்சக முடிவை அரசு அனுமதிப்பது...?

இந்தியா அரசே! ஆயுத உதவியை உடனே நிறுத்து... ராணுவ பயிற்சி அழிக்காதே... தமிழர்களை ஒடுக்கும் வஞ்சக இலங்கை அரசுக்கு துணை போகாதே...

தமிழீழ போராட்டம் பற்றி சென்.ஹில்லரி கிளிண்டன்...



மற்ற போராட்டங்கள் போல் தமிழ் புலிகளின் போராட்டத்தை எடுத்துக்கொள்ள கூடாது என்று கூறிய ஹில்லரி க்கு நன்றிகள் மற்றும் அமெரிக்கா அதிபர் தேர்தலில் வெற்றி பெற வாழ்த்துக்கள்.

தற்போதைய உட்கட்சி தேர்தல் நிலவரம்...

ஜனநாயக கட்சியில் (பெற வேண்டிய ஓட்டுகள்- 2,025)
ஒபாமா 1628
கிளிண்டன் 1493

குடியரசு கட்சியில் (பெற வேண்டிய ஓட்டுகள்- 1,191)

மேக்கையின் 1260 (வெற்றி பெற்றுவிட்டார்)

Sunday, March 16, 2008

கொ.ப.செ....

"சிலர் அசைக்கும், தேவைக்கும், வாழ்வுக்கும், வசதிக்கும் ஊரார் கால் புடிபார்,
மனம் இல்லை அதில் ஈனம் இல்லை அவர் எப்போதும் வால் புடிப்பார்...
புரட்சிதலைவர் பாடுன இந்த பாட்டு கேட்ட உடனே எனக்கு
தமிழ்நாட்டுல இன்றைய தேதில பாவப்பட்ட ரெண்டு பேரு நியாபகத்துக்கு வர்றாங்க....

ஒருத்தர் முன்னாள் திமுக பேச்சாளர் நம்ம வைகோ ....

திமுகவில் இருந்த ஆரம்பித்த அவர் அரசியல் வாழ்கை ஸ்டாலினுக்கு எதிரான வளர்ச்சியால் துரத்தி அடிக்கப்பட்டு, தனி கட்சி கண்டு, பல கூட்டணி பார்த்து, தேர்தல் தோல்விகள் கண்டு, தன்னை விரட்டி அடித்த திமுக விடமே மீண்டும் கூட்டு வைத்து இறுதியாக இப்பொது அரசியலில் அனாதையாக்கபட்ட அண்ணா திமுக வுடன் கூட்டணி கட்சி என்ற பெயரில் ஜெயலலிதாவின் பிறந்தநாள் கூட்டத்துக்கெல்லாம் தலைமை ஏற்று நடத்தும் நிலைமைக்கு தாழ்ந்து ஜெயகுமார், பன்னீர்செல்வம் போன்றோரின் பதவிக்கு வெட்டு வச்சுக்கிட்டு இருக்கார், வெற்றி பெற முடியாது என்ற தெரிந்தும் அம்மையார் ஒரு ராஜ்யசபா சீட்டை அன்னாருக்கு வழங்குகிறார் அன்னாரும் மறுக்க முடியாமல் வாங்கிக்கொண்டு வருகிறார், கலைஞர் சீட்டு எண்ணிக்கை குறைவாக குடுத்தார் என்பதற்காக கூட்டணி விலகிய 'தன்மான' வைகோவிற்கு இதைவிட அசிங்கம் இருக்க முடியாது இருந்தும் கூட்டணியில் வேறு வழி இல்லாமல் ஒட்டி கொண்டு இருக்கிறார்... ..

இன்னொருவர் முன்னாள் முரசொலி பத்திரிக்கையாளர் நம்ம ஞானி...

முரசொலியில் ஆரம்பித்து, இந்தியா டுடேவில் கண்டதை எழுதி, அனந்த விகடன்ல 'ஒ'னு பக்கங்களை கிழித்து, இப்போ அனந்த விகிடனில் இருந்து விரட்டப்பட்டு, குமுதம் வந்து மீசைல மண் ஒட்டாத குறையா "வீடு மாறது சகஜம்னு" ஒரு புது இலக்கணம் சொல்லிவிட்டு, சக பத்திரிக்கையாளரா கலைஞரோட வேலை பார்த்தபோது எல்லாம் தெரியாத குறையை இப்போது சொல்லிக்கொண்டு இருக்கிறார்... திமுகவிற்கு எதிராக எழுதுவது தான் அன்னாரின் இப்போதைய வேலை.

கடந்த வாரம் ஒ பக்கங்களில் திமுக தலைவரின் வாரிசுகளுக்குள் நடக்கும் சண்டை பற்றி எழுதி அவரின் அதீத கற்பனை வளத்தையும் ஆசையையும் வெளியிட்டுள்ளார். சிண்டுமுடியுற வேலையையும் செய்துள்ளார். ஏற்கனவே கலைஞரின் வயதை பற்றி எழுதியபோது எழுத்தாளர் பன்னீர் செல்வம் தலைமையில் நடந்த கண்டன கூட்டம் கூட கனிமொழியை திமுக தலைவராய் முன் நிறுத்துவதற்கான கூட்டம் என்று மடத்தனமாய் உலறி கொட்டி உள்ள்ளார்...

அத விட பெரிய காமெடி அண்ணா திமுக வில் ஒ.பன்னீர் செல்வன்களின் ஜனநாயக தேர்வுகளை பற்றி பெருமையாய் பேசி இருப்பதுதான். ஒரு கோடி உறுப்பினர்கள் இருக்கும் இருக்கும் கட்சி யில் எப்படி, எதற்காக,எந்த சூழ்நிலையில் ஒ.பன்னீர் செல்வம் தேர்ந்தெடுக்கப்பட்டார் மற்றும் ஜெயலலிதாவின் ஜனநாயக பற்று பற்றி உலகே அறிந்திருக்கும் போது பாவம் ஞானிக்கு எப்படி தெரியாமல் போயிற்று என்று தெரியவில்லை. என்ன பாசம் கண்ணை மறைத்திருக்கும்??


மொத்தத்தில் அண்ணா திமுகவில் இருக்கும் ஒரு கொள்கை பரப்பு செயலாளர் பதவிக்கு இரெண்டு பேர் போட்டியில் உள்ளனர்...

யாருக்கு வெற்றி?.. பொறுத்திருந்து பார்போம்...

Friday, March 14, 2008

எவனுக்கோ தேள் கடிச்சா இவனுக்கு நெறி கட்டுது...



தாய்வானின் "விடுதலை"க்கான வாக்கெடுப்பு: சிறிலங்கா கவலை


தாய்வானின் "விடுதலை"க்கான வாக்கெடுப்பு நடவடிக்கைகள் குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவலை கொள்வதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

"ஒரே சீனா" என்ற நிலைபபாட்டில் சிறிலங்கா உறுதியாக உள்ளது. தாய்வான் எந்த வகையிலும் சுதந்திரமடைவதையும் அனைத்துலக மற்றும் பிராந்திய அமைப்புக்களில் பங்கேற்பதையும் சிறிலங்கா எதிர்க்கிறது.
அத்தகைய நடவடிக்கையானது ஐ.நா. மற்றும் அனைத்துலக நடைமுறைகளுக்கு எதிரானது.

சீனா மற்றும் தாய்வான் முழுமைக்கான சட்டப்பூர்வ அரசாங்கமாக சீன மக்கள் குடியரசு உள்ளது. தாய்வான் சீனாவின் பிரிக்க முடியாத பிரதேசமாகும்.

தாய்வான் தொடர்பிலான 1971 ஆம் ஆண்டு நிலையை மாற்றியமைக்கும் முயற்சியானது ஆசியப் பிராந்தியம் முழுமைக்குமான உறவுகளில் விரிசல்களை உருவாக்கும்.


அனைத்துலக சமூகத்தின் கரிசனைகளை தாய்வான் மதிக்கும் என்று சிறிலங்கா உறுதியாக நம்புகிறது. ஆகையால் சுதந்திரத்துக்கான வாக்கெடுப்பு என்று அழைக்கப்படும் நடவடிக்கையை தாய்வான் கைவிட வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் எவனாவது எங்கயாவது தனி நாடு, தனி மாநிலம், தனி ஊரு, தனி தெரு, தனி வீடுன்னு எத தனியா வேணும்னு கேட்டாலும் பாவம் இந்த இலங்கை அரசு ரெம்ப கவலை பட அரம்பிசிடுது , தனி தெலுங்கான கேட்டு போராடுற சந்திரசேகர் ராவ்க்கு எதிராவும் நாளைக்கு அறிக்கை விட்டாலும் விடும் இலங்கை அரசு ...

Sunday, March 09, 2008

சிறு துளிகளின் சுனாமி...


ஒடுக்கப்பட்ட மக்களின் எழுச்சியை எதன் கொண்டும் தடுக்க இயலாது என்பது உண்மை தான் போலும்... இந்த ஆண்டு நமக்கு இந்த செய்தியை உரக்க சொல்லியபடியே தொடங்கி இருக்கிறது.... உலகின் எல்லா திசைகளிலும் வஞ்சிக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட இனங்களின் பேரளுச்சி நம் கண் முன்னே விரிய தொடங்கி இருக்கிறது... ஊமைகளின் கேள்விகளுக்கு காலம் நிதானமாய் பதில் எழுத ஆரம்பித்திருக்கிறது...

௧. இரண்டாம் உலகப்போர் முடிவடைந்த பிறகு 1946ஆம் ஆண்டில் ஆறுதேசிய இனங்கள் ஒன்று சேர்ந்து யூகோசுலேவியா குடியரசு உருவாக்கப்பட்டது. இந்நாடுகளை ஆக்கிரமித்து இருந்த செர்மானிய இராணுவத்தை எதிர்த்து மக்களைத் திரட்டிப் போராடிய மார்சல் டிட்டோவின் முயற்சியினால் யூகோசுலேவியா பிறந்தது என்றுதான் சொல்லவேண்டும். அவரது ஆளுமையின் விளைவாக இந்நாடு உருவாக்கப்பட்டாலும் இந்த ஆறு தேசிய இனங்களின் உணர்வுகள் மங்கிவிடவில்லை. மார்சல் டிட்டோ மரணத்திற்குப் பிறகு ஒவ்வொரு தேசிய இனமும் தங்களது தனித்தன்மையையும் இறைமையையும் நிலைநாட்ட முயன்று வெற்றி பெற்றன.

1991ஆம் ஆண்டில் சுலோவேனியா, மாசிடோனியா, குரேசியா ஆகியவை தனி நாடுகளாகத் தங்களை அறிவித்துக்கொண்டு யூகோசுலேவியா குடியரசிலிருந்து பிரிந்து சென்றன.

1992ம் ஆண்டு போசுனியா விடுதலை முழக்கம் செய்தது. எஞ்சிய செர்பியா, மான்டோனக்ராஆகியவை மடடுமே யூகோசுலேவியாவில் நீடித்தன. செர்பிய ஆதிக்க இனத்தினரால் கொசோவோ மக்கள் பெரிதும் வஞ்சிக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்தனர். ஆதலால் 2 கோடி பேர் கொண்ட கொசோவா செர்பியாவிலிருந்து பிரிந்து தன்னைத் தனி நாடாக அறிவித்துக் கொள்ள பல ஆண்டுகளாக போராடி வந்தது.





இந்நிலையில் கடந்த பிப்ரவரி மதம் பல உலக நாடுகள் அதை தனி நாடக அங்கீகரித்து விட்டன. உலக வரைபடத்தில், புதிய தேசம் ஒன்று உருவாகி விட்டது.கொசோவோ என்ற அந்த இளைய தேசம் சுதந்திரப் பிரகடனம் செய்து தன்னை இறைமை உள்ள தனிநாடாகப் பிரகடனப்படுத்தியுள்ளது.



௨. பணிரேண்டவது மலேசியா தேர்தல் நேற்று நடைபெற்றது.மொத்தம் உள்ள 222 நாடாளுமன்ற இடத்துக்கும், 13 மாநிலங்களுக்கும் வாக்கு பதிவு நடந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டு விட்டன.

மலேசிய மக்கள் தொகையில், மூன்றில் ஒரு பங்கு பேர் இந்திய மற்றும் சீன வம்சாவளியினர் ஆவர். இந்தியர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள்தான். இரு இனத்தவருமே கல்வி, வேலைவாய்ப்பில் தங்களை மலாய் இனத்தவர் புறக்கணித்து வருவதாக நீண்ட காலமாகவே புழுங்கிக் கொண்டுள்ளனர். கடந்த வருடம் தமிழர்கள் தங்களுக்கு சமஉரிமை வழங்க வேண்டும் என்று அமைதியாய் போராடிய பொழுது அன்றைய ஆளுங்கட்சி மிக கடும் நடவடிக்கை எடுத்து போராட்டகாரர்களை ஒடுக்கியது. மிக கடுமையான நடவடிக்கைகளில் சினுபான்மை இன மக்களுக்கு எதிராக அவ்வரசு இயங்கியது. இந்நிலையில் நடந்த தேர்தலில் அந்நாடு விடுதலை அடைந்த முதல் 50 வருடமாக தனி பெரும்பான்மையுடன் ஆண்டுவந்த ஆளுங்கட்சி இந்த முறை பலத்த அடி வாங்கி உள்ளது. ஆட்சி அமைக்க முடிந்தாலும் பல மாநிலங்களின் அது இழந்துள்ளது, இது அக்கட்சிக்கு மிக பெரும் பின்னடைவு. அங்கே வாழும் சிறுபான்மையினர் அனைவரும் ஆளும் அரசுக்கு எதிராக வாக்களித்து தங்களின் பலத்த எதிர்ப்பை காடிவிட்டனர். மீண்டும் அவர்களே இனி ஆட்சிக்கு வந்தாலும் எந்த முடிவையும் நாடாளுமன்றத்தில் அவர்கள் தானாக எடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டு விட்டது. அருதி பெரும்பான்மை இல்லாததால் எந்த முடிவு எடுத்தாலும் அவர்களுக்கு எதிர்கட்சிகளின் தயவும் தேவை என்னும் நிலைமை ஆகிவிட்டது.


௩. மிக பெரும் பாரம்பரியம், வரலாறு கொண்ட நாடு அமெரிக்கா. இந்த டாலர் தேசம் எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்ற தேசமாக உலகுக்கு தன்னை உயர்த்தி காட்டிகொண்டிருக்கிறது. ஆனால் இந்த வெளிச்சத்துக்கு பின்னே எத்தனையோ அடித்தட்டு மக்களின் இருண்ட வாழ்க்கையும் அவர்களது விசம்பல்களும் பல நூற்றாண்டுகளாக இருந்துகொண்டே இருக்கிறது.
இத்தாலி ஜெனோவா வை சார்ந்த கொலம்பஸ் 1492ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் அமெரிக்காவில் கால் வைக்கிறார், அன்றில் இருந்து அதுவரை இருந்த அந்நாட்டு சரித்திரம் மாற தொடங்கியது. அமெரிக்காவின் வளத்தை பார்த்து ஐரோப்பியர்கள் அமெரிக்கா மீது படை எடுக்க தொடங்கினார். அதுவரை அங்கே வாழ்ந்துவந்த உண்மை அமெரிகார்களான சிவப்பு இந்தியர்களை ஐரோப்பியர்கள் அழிக்க தொடங்கினார். ஐரோப்பியர்களின் காலனி ஆதிக்கத்தின் கீழ் வந்தது அமெரிக்கா. அதே நேரத்தில் ஆப்ரிக்க கண்டத்திலும் படை எடுத்து வளங்களை கொள்ளை அடித்தனர் ஐரோப்பியர்கள். அப்போது தான் அடிமை முறை ஆரம்பம் ஆனது. நல்ல உடல்கட்டும், உழைப்பும் கொண்ட ஆப்ரிகார்களை அமெரிக்காவிற்கு அடிமைகளாக நாடு கடத்தியது. மக்களின் நிறம் அடிமைத்தன குறியீடாய் நிறுவப்பட்டது. எல்லா சமூக நடவடிக்கைகளிலும் கறுப்பர்கள் ஒடுக்கப்பட்டு மூன்றாம்தர குடிகளாய் நடத்தப்பட்டனர். ௧௫00 ஆரம்பித்த இந்த நிற வேறுபாடு பல நூற்றாண்டு தொடர்ந்து இன்று வரை நிலவி வருகிறது. இதை போக்க பல தலைவர்கள், பல போராட்டங்கள், பல இன்னல்கள் என காலம் ஓடிகொண்டே இருந்தது.

இந்நிலையில் இந்த வருடம் 56வது அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக மற்றும் குடியரசு கட்சியினர் போட்டியிடபோகின்றனர். அத்தேர்தலுக்கு முன்னதாக அதிபர்க்கு போட்டியிட கட்சிக்குள் நடக்கும் தேர்தலில் ஜனநாயக கட்சியில் இந்த முறை முன்னால் அதிபர் கிளின்டன் மனைவி ஹில்லரி கிளிண்டனும், இல்லினுஸ் மாநில செனட்டர் பார்க் ஒபமாவும் போட்டியிடுகின்றனர். இதுவரை நாடு முழுவதும் நடந்த இந்த உட்கட்சி தேர்தலில் ஒபாமா முன்னிலையில் இருக்கிறார். அவர் தான் அடுத்த அதிபராய் வர வாய்ப்பு இருப்பாதாக தெரிகிறது. அமெரிக்கா இதுவரை அந்த இனத்துக்கு செய்த அநீதிகேல்லாம் அவரை அதிபராக்கி பாவம் கழுவி கொள்ளபோகிறது. எந்த இனம் இந்தனை நூற்றாண்டுகளாய் அடிமையாய், ஒடுக்கப்பட்டு, வஞ்சிக்கப்பட்டு, நாதியற்று இருந்ததோ.. அந்த கறுப்பினத்தை சாந்தவர் தான் ஒபாமா. அப்படியே ஹில்லரி வென்றாலும் இதுவரை அதிபர் தேர்தலில் நிராகரிக்கப்பட்ட பெண் இனத்தை சார்ந்தவர். ஆக இந்த தேர்தலில் இவர்கள் இருவரில் ஒருவரை தேர்ந்தெடுத்து அமெரிக்கா புதிய வரலாறு படைக்க போகிறது.

ஐரோப்பிய நாடுகளை ஒட்டிய கொசாவோவாகட்டும், கிழக்காசிய சார்ந்த மலேசியாவாகட்டும், மேலைநாடு அமெரிக்கவாகட்டும் ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களில் விடுதலை போராட்டம் அடுத்த தளத்துக்கு நகர்ந்திருக்கிறது. பல்வேறு தேசிய இனங்களை கொண்ட இந்தியாவிலும் சிறுபான்மை சீக்கிய இனத்தை சார்ந்தவர் தான் பிரதமர், ஒடுக்கப்பட்ட பெண் இனத்தை சார்ந்தவர் தான் ஜனாதிபதி. ஜனநாயகம், உலக நாடுகள், பிற இன மக்கள் என அனைத்தும் அவர்களின் உண்மையான ஜீவாதார போராட்டத்தை அங்கீகரித்து, காது குடுத்து கேட்க ஆரம்பித்திருக்கின்றன. இது மிக பெரும் மாற்றம். இதில் ஒரு பகுதியாக உலக நாடுகளும், சர்வதேச சமூகமும் இலங்கையின் சிறுபான்மை தமிழ் ஈழமக்களின் ஜீவாதார போராட்டத்தையும், ஆதிக்க இலங்கை அரசின் அட்டுளியத்தை புரிந்துகொண்டு தமிழீழம் மலர துணை இருந்தால் வரலாற்றின் பக்கங்களில் இது பொன்னான காலம் என கருதலாம்.

ஆக மொத்தத்தில் இந்த ஆண்டு உலகின் ஒடுக்கப்பட்ட, சிறுபான்மையின மக்களின் எழுச்சி ஆண்டாக அறிவிக்கலாம்.


Saturday, March 08, 2008

சரித்திரத்துக்கு ஏதடா சாவு....


படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" கி.சிவநேசனுக்கு தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் நேற்று இறுதி வணக்கம் செலுத்தினார்.
எண்ண ப்பிரசவம் சார்பில் வீரவணக்கம் செலுத்துவோம்.


ராணுவ தாக்குதலில் காயம் அடைந்தார் என்ற இலங்கை அரசின் பொய் புரட்டை மீண்டும் ஒருமுறை உலகுக்கு நிருபித்து , தினமலர், தினமணி, ஹிந்து முகங்களில் எல்லாம் கரி புசி, தன் ரோமங்களை கூட இலங்கை இராணுவம் பிடுங்க முடியாது என்று கூறாமல் கூறி,நேற்று நடந்த வீரவணக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் தமிழின தலைவர் பிரபாகரன்.

Friday, March 07, 2008

பகல் கனவு...

"இன்றைக்கு குஜராத் பசுமையாக இருக்கிறதென்றால் அதற்கு மோடியின் புத்திசாலித்தனமான, நேர்மையான அணுகுமுறைதான் காரணம். ரஜினி மனது வைத்தால் தமிழகமும் கூட அப்படியொரு (குஜராத் போல) மாநிலமாக மாற வாய்ப்பு இருக்கிறது"

பா.ஜ.க வின் ராஜகுரு சோ ரஜினி சுயசரிதை வெளியீட்டு விழாவில் மேற்கண்டவாறு பேசி இருக்கார், ரஜினிக்கேல்லாம் சுயசரிதையா என்ற கேள்விக்கெல்லாம் போக வேண்டாம். அது விவாதிக்க வேண்டாத விஷயம். (தேச பிதா காந்தியின் சத்தியசோதனையவே மலிவு விலையில் வைத்து விற்றாலும் வாங்க ஆள் இல்லாமல் இருக்குது, சத்தியசோதானையே சோதனைல இருக்குது இதுல எவன் சுயசரிதை எழுதுனா என்ன விக்கவா போது?. அப்படியே வித்தாலும் இதை காசு குடுத்து வாங்குபவன் மஞ்சள் பத்திரிக்கையை வாங்குபவனுக்கு சமம் தான்) அகவே அதை விட்டு விடலாம்.

ஆனால் மோடியையும் ரஜினியையும் ஒப்பிட்டு பேசும் சோவின் உள் அர்த்தம் என்ன?.

இந்த வருடத்தில் 10 மாநிலங்களில் தேர்தல் வருகிறது. இதில் பா.ஜ.க அடிபட்ட கர்நாடகாவும், பா.ஜ.க ஆளும் ராஜஸ்தான், மத்தியபிரதேசம், சடிஷ்கரும் அடக்கம். அடுத்து வருகிற லோக்சபா தேர்தல்க்கு இந்த மாநிலங்களில் தேர்தலின் வெற்றி மிகவும் கைகுடுக்கும். ஆக மாநிலங்களில் பாரதியஜனதவின் வெற்றி கட்டாயம் ஆகிறது. இன்னொன்று கர்நாடகாவில் பா.ஜ.கவின் வெற்றி தென் மாநிலங்களில் அது கால் ஊன்ற வழிவகுக்கும். காங்கிரஸின் மக்களை கவர்ந்த பட்ஜெட் வந்த நிலையில் அதை எதிர்கொண்டு மக்களை அதி மீறி கவர, வெற்றியை ருசிக்க பா.ஜ.கவிற்கு அவசரமாக ஒரு நட்செத்திரம் தேவைபடுகிறது. அதுவும் தென் மாநிலத்திற்கு மிகவும் பிடித்தமான நட்செத்திரம்.

கடந்த உத்தரபிரதேச தேர்தல் தோல்வியில் பா.ஜ.கவும் இந்துதுவாவாதிகளும் தெரிந்துகொண்டது பா.ஜ.க பிராமணர் களை மட்டும் நம்பியே இருக்க முடியாது என்பதை தான். குஜராத்தில் பிராமணர் அல்லாத மோடி ஆட்சியை புதிது பா.ஜ.கவை அரியணை ஏற்றுகிறார் ஆனால் பிரமணர்களை நம்பி உத்தர்பிரதசத்தில் களம் இறங்கிய பா.ஜ.க தோற்கிறது. பகுஜன் சமாஜ், பா.ஜ.கவை விட அதிகமாய் அவர்களை கவர்ந்துவிட்டது. முடிவில் பிரமணர்களை மட்டும் நம்பி பிரோஜனம் இல்லை என இந்துத்துவாவாதிகள் தெரிந்துகொண்டனர்.

இந்த நிலைமையில் இந்துத்துவாவை தூக்கி புடித்து பா.ஜ.க வை மீண்டும் ஆட்சி கட்டிலில் அமரவைக்க பிராமணர் அல்லாத, நட்செத்திர அந்தஸ்துடன் கூடிய இந்துத்துவாவாதிகளின் துருப்பு சீட்டு மோடி, அந்த துருப்பு சீட்டு தென் மாநிலங்களில் எடுபடாது என்று அறிந்துகொண்டு அதற்கு மாற்றாக ஒரு சீட்டை இந்துத்துவாவாதிகள் தேடிகொண்டிருகிறார்கள். இந்த நேரத்தில் தான் சோ இப்படி வார்த்தைகளை உதிர்த்திருக்கிறார்.

பெரியார் என்ற மாபெரும் சக்தியும், அவர் எடுத்து வைத்த வாதங்களும், கூறி சென்ற கொள்கைகளும் எக்காலத்துக்கும் மீண்டும் பிராமண ஆதிக்கதியோ, இந்துத்துவாவையோ தமிழ் மண்ணில் கால் வைக்க விடாது. இந்தியாவே பாபர் மசூதி இடிப்பால் அல்லோலபட்ட போது தமிழகம் அமைதியை இருந்ததற்கு காரணம் பெரியாரின் கொள்கைவீச்சு தான். பிராமணர் இல்லாத ஒருவர் மூலமாகத்தான் தான் தாங்கள் தமிழகத்தில் காலோச்ச முடியும் என்பதை நன்கு அறிந்த சோ இந்துத்துவாவாதிகளுக்கு போட்டு கொடுத்திருக்கும் ரூட் தான் ரஜினி.

சினிமா என்ற மாயவலைக்குள் தமிழகமும், ஏன் தென் மாநிலங்கள் அனைத்துமே சிக்குண்டு இருப்பதால் இந்துத்துவாவை அதன் மூலமாக நிலைநாட்ட பா.ஜ.க ரஜினியை பயன்படுத்தலாம் என்ற கனவை, ஆசையை தான் சோ இங்கே வெளியிட்டு இருக்கிறார்.

பெரியார் என்ற மிக பெரும் ஆளுமையின் படிமானங்கள் இருக்கும் வரை அவர் போட்டு வைத்த திராவிட இயக்க பாதை இருக்கும் வரை 'சோ'க்களின் இந்த கனவுகள், எல்லாம் பலிக்காத பகல் கனவுகளே...

Wednesday, March 05, 2008

இன்னும் தமிழன் இந்தியனா?



‌‌சி‌றில‌ங்க‌க் க‌ட‌ற்படை‌த் து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் த‌மிழக ‌மீனவ‌ர் ப‌லி! -

ராமே‌ஸ்வர‌ம் அருகே கட‌லி‌ல் ‌மீ‌‌ன் ‌பிடி‌த்து‌க் கொ‌ண்டிரு‌ந்த த‌மிழக ‌மீனவ‌ர்க‌ளி‌ன் ‌மீது ‌சி‌றில‌ங்க‌க் கட‌ற்படை‌யின‌ர் அத்து மீறி வந்து நட‌த்‌திய ‌து‌ப்பா‌க்‌கி‌ச் சூ‌ட்டி‌ல் ‌மீனவ‌ர் ஒருவ‌ர் கொல்லப்பட்டா‌ர். இதனால் ராமே‌ஸ்வர‌ம், ம‌ண்டப‌ம் பகு‌தி‌க‌ளி‌ல் பத‌ற்ற‌ம் ‌நிலவு‌கிறது. நேற்றைய வருத்த செய்தி இது.

2006ஆம் ஆண்டு ஜூலை மாதம் இஸ்ரேல் பகுதியில் அத்து மீறி நுழைந்து இரண்டு வீரர்களை கொல்கிறது லெபனான் ஹெஜபோள்ள அமைப்பு. அடுத்த கணமே லெபனான் நாட்டுடன் போர் தொடங்குகிறது இஸ்ரேல். தன் நாட்டு பிரஜை கொல்லப்பட்ட உடன் அந்த நாட்டு உடன் போர் தொடுக்கிறது ஒரு நாடு.

அனால் இங்கே தமிழ் மீனவன் காலம் காலமாக அண்டை நாட்டு ராணுவத்தால் அத்து மீறி சுட்டு கொள்ள படுகிறான் நம் நாடு வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறது. நம் வெளி உறவு கொள்கைக்கான மத்திய அமைச்சர் கடந்த வாரம் கீழ் கண்டவாறு அறிக்கை விட்டு கெஞ்சி கொண்டிருக்கிறார்... அறிக்கையின் சாரம் இது தான் ..."சிறிலங்கா கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் மீதான சிறிலங்கா கடற்படையின் நடவடிக்கைகள் வருத்தம் தருகின்றது. எமது மீனவர்கள் கடல் எல்லைகளை மதிக்க வேண்டியது முக்கியமானது என்பதுடன், சிறிலங்கா கடற்படையினரும் தமது நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றார் அவர்."

கடந்த வாரம் இப்படி அறிக்கை விட்ட பின்பும் நேற்று சுட்டிருக்கிறார்கள் இலங்கை கடற்படையினர், இதையாவது கண்டிக்க வேண்டாமா??...
சரி கண்டிக்கிறது ஒரு புறம் இருக்கட்டும். அந்த அறிக்கையில் நம் மீனவர்களை எல்லைகளை மதிக்க வேண்டியது முக்கியம் வேற சொல்றார். படிப்பறிவில்லாத, மீன்புடி தொழில் மட்டுமே தெரிந்த, ஏழை மீனவனுக்கு எப்படி கடலுக்குள்ள எல்லை தெரியும். எப்படி அவர்கள் கண்டு புடிச்சு எல்லை தாண்டாமல் சரியா திரும்பி வருவார்கள். வெறும் கடல் நடுவில் எப்படி எல்லை கோடுகளை கண்டுபுடிப்பது. சரி இவரை கடலுக்குள் அனுப்புவோம் பெரிய படிப்பு படிச்சவரு, இத்தனை வருசமா இந்திய அமைச்சரா இருக்கவரு, இவரு போய் எல்லைய சரியாக கண்டுபுடிசிருவாரா?. என்ன பேச்சு இது...

இங்கே குடிமகனின் உயிர் போய் கொண்டிருக்கிறது அதற்கு காரணமான அந்த நாட்டு ராணுவ தளபதிக்கு சிவப்பு கம்பள வரவேற்ப்பு கொடுத்து கொண்டிருக்கிறது நம் அரசு. என்ன கொடுமை இது...

பாகிஸ்தான் இராணுவம் வந்து காஷ்மீரில் சுட்டால் எப்படி எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று நாம் கருதுகிறோமோ அதே அளவு பயங்கரவாதம் நேற்றைய இந்த நிகழ்வு. இதையும் நம் அரசு கண்டிக்கணுமா வேண்டாமா?.
தமிழகம் இந்தியாவில் தானே இருக்கிறது?.. தமிழன் இந்தியன் தானே?... தமிழனின் உயிரும், காஷ்மீரியனின் உயிரும் சமம் தானே..??இதற்கெல்லாம் பதில் ஆம் என்றால் அந்த நாட்டின் மீதி போர் தொடுக்க வேணாம், ஏன் கண்டிக்க கூடவில்லை இந்தியா??...

எங்கெல்லாம் தன் குடிகளின் உயிர்களை அந்நாட்டு அரசு அலட்ச்சிய படுத்துகிறதோ அங்கெல்லாம் தனி நாடு போராட்டம் வெடிக்கிறது என்கிறது வரலாறு. இந்தியா மட்டும் விதி விளக்கா என்ன?..