Wednesday, December 31, 2008

Tuesday, October 21, 2008

புரட்சி என்றும் வெல்லும் அதை நாளை தமிழீழம் சொல்லும்...

தமிழின உணர்வாளர் குழு சார்பாக திரையுலகத்தினர் ராமேஸ்வரத்தில் நடத்திய பொதுக்கூட்டத்தில் தமிழின போராளி அண்ணன் சீமான் ஆற்றிய உரை... தமிழன் ஒவ்வொருவரும் கேட்கவேண்டிய பேச்சு..

Monday, October 06, 2008

தமிழ் ராப் - ஒரு புதிய பாதை..

இசை ஒரு அடையாளத்தின் குறியிடு...அவை சந்தோஷ சிரிப்பாகவும், வேதனையின் வெளிப்பாடகவும் , கோபத்தின் கொக்கரிப்பாகவும் இருக்கலாம்.. சாக்ரடிஸ் சொன்னது போல் இசையின் மிக சிறந்த உன்னத வடிவம் தத்துவமாக கூட இருக்கலாம்... இசையின் வலிமை அளவிடமுடியாதது, சொன்னால் நம்ப கடினமாக இருக்கும் ஒரு நாட்டின் விடுதலையை கூட வாங்கி கொடுக்கும் வலிமை கொண்டது இசை...

ரஷ்யாவின் எல்லையில் இருக்கும் ஒரு சிறிய நாடு 'எஸ்டோனியா'. பல காலம் ஸ்வீடன் நாட்டலும், பின்பு ரஷ்யாவாலும் ஆக்கிரமிக்கப்பட்ட பாவப்பட்ட நாடு... 194௦ களில் இருந்து ரஷ்யாவின் கட்டுப்பாடில் இருந்துவந்தது.. ஆனால் மக்களின் ஆழ்மனதில் விடுதலை வேட்கை கனன்றுகொண்டேதான் இருந்தது... அவ்வேட்கை ஒரு பாடல் மூலமாக பரவி அந்த நாட்டின் விடுதலை வாங்கிகொடுத்து என்பது வரலாறு... வரலாறை அறிய கீழயே சொடுக்கவும்...

http://www.freemuse.org/sw22342.asp

உலக வரலாற்றில் பல புரட்சிகள் வலுவிழக்காமல் நீடித்ததற்கு காரணமும் இசைதான்...

அப்படி பட்ட வகையை சார்ந்த இசைதான் ராப் இசை. தான் நினைத்ததை தனக்கு தோன்றியபடி வெளிப்படுத்துவதே ராப் இசை. அமெரிக்காவில் இருந்த நிற வேறுபாட்டை எதிர்த்து வந்த பாமரனின் இசை... 


அந்த இசையின் மூலம் தமிழ் பற்று பாடல்களையும் விடுதலை வேட்கைகுரிய பாடல்களையும் நமக்கு அளித்துள்ளார் சுஜீத் என்ற ஈழத்தமிழ் இளைஞர்......

மிகவும் ரசிக்கத்தக்க, கேட்டவுடன் உணர்வுகளை தூண்டும் விதமாக உள்ளது பாடல்கள்... முக்கியமாக தமிழனிடம் இல்லாத இன பற்றும், மொழிபற்றும் கொண்டு பாடல் இசைதுள்ளார்.. மிக மிக பாராட்டப்பட வேண்டிய முயற்சி..


இசையை ஆன்மீகத்தொடும், பொழுதுபொக்கொடும் முடிச்சுபோட்டு பாமரனிடத்தில் இருந்து வெகு தூரம் கடத்தி சென்றுவிட்ட தமிழ்நாட்டில் இப்பாடல்கள் ஒலிக்கவேண்டும்...


Thamilar Kudi - SujeethG


"தமிழை மறுத்து மறைத்து வாழும் வாழ்வில் பயனே இல்லை - உன்
சொந்த இனத்தை மறைக்கப்போனா மனுசன் நீயும் இல்லை
கண்டதுக்கும் வளைஞ்சு கொடுக்க தமிழன் தண்ணி இல்லை - என்றும்
குப்பை வாழ்க்கை வாழ நீயும் சேத்துப் பண்ணி இல்லை
செந்தமிழா எழுந்து வா செந்தமிழைக் காக்க வா
தமிழர் குடி மறவரடி மறவர் குடி தமிழரடி"


Saturday, September 27, 2008

இட ஒதிக்கீடு... ஒரு விவாதம்...

இன்றைய பல இளைஞர்கள் மத்தியில் இட ஒதிக்கீடி பற்றிய மிக தவறான எண்ணம் மேலோங்கி இருக்கிறது... இட ஒதிக்கீடால் தான் அவர்கள் படித்திருந்தாலும் திட்டமிட்டு மேல்சாதியினரால் பரப்பப்படும் வஞ்சக வார்த்தைகளால் இட ஒதிக்கீட்டை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறார்கள்...

அதை பற்றி எனக்கும் என் நண்பனுக்கும் மின்னஞ்சலில் நடந்த விவாதமே இது...

----------------------------------------------------------------------

அன்பு நண்பன் சூரிக்கு,

நீ தவறென்று கூறவில்லை நண்பா... உன் கருத்தாக்கம் தான் தவறென்று எதிர்த்தேன்... உன்னை பற்றி அறியாதவன் இல்லை நான்... ஆதரிக்க வேண்டிய நீயே மறுபரிசீலனைக்கு ஆட்படுத்துகிறேயே என்ற ஆற்றாமையில் தான் கடுமையாக பதில் தொடுத்தேன். கடுஞ்ச்சொற்க்கள் கூறி விவாதத்தை திசை திருப்புவதோ உனக்கு பாடம் கற்பிப்பதோ என் நோக்கமல்ல... இருப்பினும் நண்பன் மனம் நோகும்படி பதில் இருந்தமைக்கு மன்னித்தருள்க...

மீண்டும் ஒருமுறை உனக்கு நியாபக படுத்துகிறேன் நண்பா... சமூக நீதி என்பது பொருளாதார முன்னேற்றம் அல்ல.. பல நூறு ஆண்டுகளாக உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு அடிமையாகவே வாழ்த்த கூட்டத்தை முன்னேற்றி தமக்கான உரிமைகள் என்ன என்று அறியவைத்து, அதை பெற வழிவகுக்கவும் செய்வது தான் சமூக நீதி தத்துவம்...இடஒதுக்கீடு என்பது, வேலை வாய்ப்புகளில் மட்டும் இடம் கோருகின்ற கோரிக்கை மட்டும் அல்ல . கல்வி, வேலை, அரசியல் என மூன்று தளங்களிலும், அனைத்துச் சாதியினருக்கும் சம உரிமை கோருகின்ற சமூக நீதிப் போராட்டத்தின் தொடக்கமே அது...

இந்தியாவின் முன்னாள் தலைமை அமைச்சர் வி.பி.சிங் கூறியதைப்போல, ''இட ஒதுக்கீடு என்பது, அதிகாரக் கட்டமைப்பில், சமூகத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட அனைத்துச் சாதியினருக்கும் பங்கு அளிப்பதுதான்.'' (It is a question of power sharing and not jobs alone)

முதன் முதலில் இட ஒதீகிட்டை கொண்டுவந்த பெருமை தமிழ் நாட்டிற்க்கு தான் உண்டு..

1920ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களில் வெற்றிபெற்ற நீதிக்கட்சி, 17.12.1920இல், சென்னை மாகாண அமைச்சரவையை அமைத்தது. பதவியேற்றவுடனேயே, அரசு வேலை வாய்ப்புகளில் அனைத்து மதத்தினர், சாதியினருக்கம் இடஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது. 1921ஆம் ஆண்டு வெளியான அந்த ஆணைப்படி, பின்வருமாறு அரசு வேலைகளில் இடங்கள் ஒதுக்கப்பட்டன.

1. பார்ப்பனர் அல்லாத இந்துக்கள் 44%
2. பார்ப்பனர்கள் 16%
3. முசுலீம்கள் 16%
4. ஆங்கிலோ இந்தியர் மற்றும் கிறித்துவர்கள் 16%
5. தாழ்த்தப்பட்டோர் 8%
____
100
____

அன்றில் இருந்து இன்று வரை மேல்சாதி மக்களிடம் இருந்து இதற்க்கு எதர்ப்பு வந்த வண்ணம் உள்ளது... 2006 ஆம் ஆண்டு வெளிவந்துள்ள, ''Falling over Backwards'' என்னும் தன் நூலில், முன்னாள் அமைச்சர் அருண்சௌரி, இட ஒதுக்கீடுடுக் கொள்கையை மிகக் கடுமையாகச் சாடியுள்ளார். இடஒதுக்கீட்டின் பேரில், இந்துக்களிடம் பிரிவினை எண்ணத்தை வெள்ளையர்கள் திட்டமிட்டு உருவாக்கினர் என்றும், 'பிரித்தாளும் சூழ்ச்சியே இடஒதுக்கீடு' என்றும் கோபக் கணைகளை அவர் வீசுகின்றார், அருண்சௌரி ஒரு குறியீடு மட்டுமே. உயர்சாதியினர் என்று தம்மைக் கருதிக் கொண்டிருக்கும் அனைவரின் எண்ணமும் அதுதான்.

என் கேள்வி இது தான், கோயில்களில் அர்ச்சகர்களாக இருப்பவர்கள் இன்று வரை ஒரே சாதியினர்தானே.. . அதேபோல, பிணம் எரிப்பவர்களும், செருப்புத் தைப்பவர்களும், சாக்கடை சுத்தம் செய்பவர்களும் ஒரே ஒரு குறிப்பிட்ட சாதியினர்தானே... தொழிலையும், சாதியயையும் முடிச்சு போட்டு பிரிவினையை கொண்டுவந்தது யார்?...இவற்றை வெள்ளையர்களா உருவாக்கினார்கள் ???

ரிக் வேதத்தின் 10ஆவது அத்தியாயமான 'புருஷசூக்தம்' என்னும் இயலில்தான், பிரம்மத்தின் தலையிலிருந்து தோன்றியவர்கள் பிராம்மணர்கள் என்றும், தோளில் பிறந்தவர்கள் சத்திரியர்கள் என்றும், இடையில் தோன்றியவர்கள் வைசியர்கள் என்றும், பாதத்தில் பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றும் கூறப்பட்டது... இதை உருவாகியவர்கள் யார் என்பதை உங்களுக்கு சொல்ல தேவை இல்லை...

இப்படி திட்டமிட்டு அடிமை அடிமையாகவே இருக்க வழி செய்தனர் என்றால் மிகை இல்லை.. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்பும் அறிவிக்கப்படாத வர்ணாசிரம ஆட்சி தான் நடந்து வந்தது, இந்தியாவில் மேல்சாதியினரின் ஆதிகார ஆளுமைக்கு ஒரு சிறிய எடுத்துகாட்டு...(ஆண்டு ௧௯௫௧)

இந்தியா முழுவதும் இருந்த அரசுச் செயலர், துணைச் செயலர் பதவிகள் 506. அவற்றுள் 351 பேர் பார்ப்பனர்கள். உச்ச நீதி மன்றத்தில், 16 நீதிபதிகளில் ஒன்பது பேர் பார்ப்பனர். 140 வெளிநாட்டுத் தூதுவர்களில் 68 பேர் பார்ப்பனர். இந்தியாவின் மொத்தம் 3500 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் 2376 பேர் பார்ப்பனர். ஆளுநர்களாக இருந்த 27 பேரில் 13 பேர் பார்ப்பனர்.

இப்படி 'உயர் சாதியினர்' எனப்படுவோரிடம் மட்டுமே தேங்கிக் கிடக்கும் அதிகாரங்களை, அனைத்துச் சாதியினருக்கும் பகிர்ந்தளிக்கும் ஜனநாயகப் பாத்திரத்தைத்தான் இடஒதுக்கீடு செய்கிறது. ஏற்றத்தாழ்வே, ஒரு சமூகத்தின் அடிப்படை வடிவமாக இருக்குமெனில், அதனை உடைத்தெறியும் ஜனநாயகச் சமத்துவக் கடமையை தான் இடஒதுக்கீட்டுக் செய்கிறது.

இந்த இட ஒதிகீட்டால் பாதிக்கப்பட்ட பல தலைமுறையாக படித்த குடும்பத்தில் இருந்து வந்த சிலரை பற்றி நீ பேசுகிறாய்.. இன்னும் பயனடைய போகும் விவசாய, கூலி, மீனவ மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட சமுதாயத்தில் இருந்து முதல் தலைமுறையாக படிக்க வரும் லட்சக்கானக்கானவர்களை பற்றி நான் பேசுகிறேன்...

சரி உன் கதைக்கே வருகிறேன், அந்த கதை தமிழ்நாட்டில் நடப்பதாய் வைத்து கொள்வோம். தண்ணீரில் மூழ்க போவோரில் 46.14% பிற்படுத்தபட்ட மக்கள் இருக்கிறார்கள், 20.87% மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் இருக்கிறார்கள், 19% தாழ்த்தப்பட்ட மக்கள் இருகிறார்கள், 1.04% பழங்குடியினர் இருக்கிறார்கள், இதர 12.95% முற்பட்டசாதி மக்கள் இருக்கிறார்கள்.. ஆக மொத்தம் 100% (இது 2001 ஜனத்தொகை கணக்குப்படி).. அதில் நீ சொன்னபடியே பிற்படுத்தபட்டோரில் 10% நீந்த தெரியும் (ஒரு தலைமுறையாவது படித்தவர்கள்)... முற்பட்டசாதி மக்கள் அனைவருக்கும் அரைகுரையாவது நீந்த தெரியும்(பல தலைமுறையாக படித்தவர்கள்)...

இதில் 12.95% அனைத்து சாதி மக்கள் ஒருபுறமும், 87.05% மேல்சாதி மறுபுறமும் இருகிறார்கள்..
நம்மிடம் ஒரு படகு இருக்கிறது... 2 முறை போய் அவர்களை அழைத்துவரலாம்... முதல்முறை 70% மக்களை காப்பாற்றி கூட்டிவரலாம்.. இரண்டாம் முறை 30% மக்களை கைப்பற்றி கூடிவரலாம் என்ற நிலைமை.. இந்த நிலைமையில் அனைவரையும் காப்ற்றவேண்டும் என்பதே நம் கொள்கை.

முதலில் பிற்படுத்தபட்டோரில் 10% நீந்த தெரிந்தவர்களைகளையும், அரைகுறையாய் நீந்த தெரிந்த 12.95% முற்பட்ட சாதியினரையும் விட்டுவிட்டு.... மீதி 77.05% நீந்தவே தெரியாதவர்களை முதல் படகில் ஏற்றலாம்... ஆனால் படகில் 70% தான் ஏற்றமுடியும்.. சரி அப்போ காப்பாற்றபடுபவர்களில் அதிக சதவீதம் உள்ள பிற்படுத்தபட்டோர்க்ளில் 7.05% மக்களை நீந்த தெரியாவிடினும் அடுத்தமுறை வரும் பொது உயிரோடு இருந்தால் காப்பாற்றிக்கொள்ளலாம் இல்லை என்றால் சாகட்டும் என்று மீண்டும் தண்ணீரில் விட்டுவிட்டு. மற்றவர்களை ஏற்றி கொண்டு போய் கரையில் விட்டுவிடலாம்...

இரண்டாம் முறை வந்து மீதி 30% மக்களில் யார் யார் நீந்தி உயிரோடு இருகிறார்களோ அவர்களை கூடிக்கொண்டு கரையில் விட்டுவிடலாம். நீந்த தெரியாத பிற்படுத்தப்பட்ட 7.05% மக்கள் படகு திரும்பி வரும்வரை உயிரோடு இருப்பதற்கு உத்தரவாதம் இல்லை.. ஆனால் 12.95% மக்கள் உயிரோடு இருப்பதற்கு உத்தரவாதம் இருக்கிறது..

இதில் முதல் படகுதான் 69% இட ஒதிக்கீடு, இரண்டாம் படகுதான் 31% இட ஒதீக்கிடு அற்ற ஓபன் கோட்டா...

இவ்வளவு இட ஒதீக்கீடு இருந்தும் 7.05% பிற்படுத்தப்பட்ட மக்கள் பாதிக்க தான் படுகிறார்கள்..

தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கும் இட ஒதிகீட்டை கீழே பார்க்கவும்...



நிலைமை இப்படி இருக்க இந்த இட ஒதிகீட்டையும் நீ மறுபரிசீலனை செய்ய சொன்னால் உணர்ச்சிவசப்படாமல் என்ன செய்வது... உணர்ச்சிவசப்படாமல் இருந்தால் தான் அது என் பிறப்பின் பெருங்குற்றம்...



இந்த இட ஒதிக்கீடை பற்றி தமிழகத்தின் தென் மூலையில் இருந்து இட ஒதிக்கீட்டால் படித்து வந்த நானும், நீயும் அமெரிக்காவில் அமர்ந்து இணையத்தில் மின்னஞ்சல் மூலமாக விவாதிக்க காரணமாய் இருந்த தந்தை பெரியாரை நன்றியுடன் நினைத்து... என்றும் இட ஒதிக்கீடு இல்லா தோழமையுடன்,

பாக்கியராசன் சேதுராமலிங்கம்,
குலமங்கலம் கிராமம்,
மதுரை மேற்கு தாலுகா,
மதுரை மாவட்டம்.


----- Original Message ----
From: Sooria Jeyaraman
To: ellistopp@yahoogroups.com
Sent: Thursday, 25 September, 2008 5:40:44 PM
Subject: Re: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it

Maapla Packia .. konjam unarchivasapattutan nu ninaikiren.. ivlo sharpa personala insult pannaama irunthu irukalam, felt bad but its ok.. it’s my bad, that I took the liberty that people who know me won’t need an explanation that I’m not trying to brag or boast or trying to bring out an opinion just for the sake of opinion or trying to say I was right.. I was just trying to make an opinion and a healthy discussion on one issue among the millions of other issues, my bad about being informal too, learnt the lesson in the hard way..





Athukaaga naanga karutha sollama poga mudiyaathu, Again you are misunderstanding what I was trying to say, I don’t say what was written in that story was right or I don’t say we don’t need reservation now or I don’t say the dalits are doing great and I don’t have another ant story to shove it up ..but I do said that we should also keep “people” in mind rather than just lower class people and I do said that everybody will need help EVENTUALLY and I do said that don’t use ‘Treat People as People’ only when needed.. 80 peru thannila moolgrappo naan 60 pera mattumthan kaapathuven (eventhough when they have 10 good swimmers among those 60 who can rescue themselves) just because they are lower class and will leave the other 20 people drownedngratha yennala othukka mudiyalai.. all I said was we should put all our efforts in rescuing the struggling 50 but also keep an eye on the other upper class 20 who might need the help sooner or later.. as I told you in my earlier email I don’t need you to point out a real life example, even though I might not be doing anything but do learn about the issues and do get affected by it, so again you don’t have to point it to me.. I hatehate proving to people, not just my social responsibility about anything so if you think I don’t have a social responsibility and shouldn’t give an opinion then it’s your problem, I don’t give a damn.. but do keep in mind that everyone is one way or another a NERMAIYAANA KOMBAN !!!



Soori



--- On Wed, 9/24/08, Packiarajan S wrote:

From: Packiarajan S
Subject: Re: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it
To: ellistopp@yahoogrou ps.com
Date: Wednesday, September 24, 2008, 11:45 PM



நண்பா உன்னிடம் சமூக அக்கறை இருப்பதை கண்டு மகிழ்ச்சி...

ஆனால் ஒரு வருத்தம்...

இதுவரைக்கும் 305 தமிழ் மீனவர்கள் அண்டை நாட்டு ராணுவத்தால் சுட்டு கொல்லப்படும், ஆயிரகணக்கான தடவை தாக்கப்பட்டும் அது இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கும் பொழுது வராத சமூக அக்கறை...

81 தமிழ் விவசாயிகள் எலிகறி சாப்பிட்டு, பின்பு அது கூட கிடைக்காமல் விஷம் அருந்தி இறந்த பொழுது வராத அக்கறை...

லட்சகணக்கான ஈழத்தமிழர் உயிரிழந்து, வீடிழந்து, உடமை இழந்தபோது வராத அக்கறை... அவர்கள் அகதியாய் வந்து தஞ்சமடைத்த பின்பும் திறந்த வெளி சிறைசாலையில் நாயினும் கேவலமாய் நடத்தப்படும் பொழுது வராத அக்கறை...

தமிழக வளத்தை பெருக்க ஒரு திட்டம் வருகையில் மதத்தின் பெயரால் அதை தடுக்கப்படும் பொழுது அதை முறியடிக்க வேண்டும் என வராத அக்கறை...

உச்சநீதி மன்றமே ஆணை இட்டபின்பும் ஒரே இந்தியாவில் இருக்கும் அண்டை மாநிலங்கள் தண்ணீர் தர மறுத்து அட்டுழியம் செய்யும் பொழுது அதை எதிர்த்து வராத அக்கறை...

நம் பக்கம் விழும் தண்ணீரை குடிநீராக்கி மக்கள் தாகம் தீர்க்க திட்டம் தொடங்கும் முன்னரே அண்டை மாநிலம் எதிர்ப்பு தெரிவித்து தடுக்க முனைகையில் வராத அக்கறை...
இப்பிரச்சனையால் அப்பாவி தமிழர் மூவர் பேருந்தோடு கர்நாடகாவில் எரிக்கப்பட்ட பொது வராத அக்கறை..

மேல்சாதி மிருகங்களால் கடந்த மாதம் முன்பு தாழ்த்தப்பட்ட என் சகோதரி வாயில் மலம் திணித்து தன் ஆதிக்க சாதி வெறியை காட்டிய காட்டுமிராண்டிகளை எதிர்த்து வராத அக்கறை...

சேலத்தில் இன்னும் பல உறவுகள், எல்லோருக்கும் பொதுவான கடவுளை கூட கோயிலினுள் சென்று
தரிசக்கமுடியாத கேடுகெட்ட நிலையை கண்டு அதை போக்க வராத அக்கறை...

மனித மலத்தை மனிதன் அல்லும் கொடுமையை காலம் காலமாக நம் பல சொந்தங்கள் செய்கையில், அது புனித தொழில் அதை தொடர்ந்து செய்யுங்கள் என மேல் சாதி நாய்கள் சொல்லி மேலும் பல காலம் நம்மை அடிமையாக்க துடிக்கையில் அக்கொடுமை போக்க, அதை எதிர்த்து குரல் கொடுக்க வராத அக்கறை..

குஜராத்தில் மதவெறி அரசியலால் பல ஆயிரம் சிறுபான்மையினர் உயிரோடு கொளுத்தபட்டார்களே அவர்கள் உடைமைகள் சூரையாடபட்டனவே.. அப்பொழுது வராத அக்கறை..

ஒரிசாவில் மதம் தலைவிரித்தாடி பல லட்சம் பேர் வீடிழந்து, உடமை இழந்து நடுத்தெருவில் நின்றுகொண்டிருக்கும் நிலையில் வராத அக்கறை...

கடைசியாக, உயரினும் மேலாம் தாய்மொழி அம்மொழி கொஞ்சம் கொஞ்சமாய் தன்னுயிரை விட்டுகொண்டிருக்கையில் தன்னாலான அளவு அதை காப்பாற்ற வேண்டும் என்று வராத அக்கறை...

இட ஒதிக்கீடில் மட்டும் வருவது ஏன்?..

நீ மேற்சொன்ன விஷயத்துக்கெல்லாம் அக்கறை கொள்ளமாட்டாய், வருத்தபடமட்டாய் என்றோ வருத்த படவில்லை என்றோ குற்றம் சொல்லவில்லை நண்பா.. ஆனால் இதுக்கெல்லாம் நீ இதே போல் ஒரு எறும்பு கதை சொல்லவில்லையே நண்பா.. அது தான் என் கவலை..

இல்லை இது தான் உன் சமூக அக்கறை என்றால் அந்த ________ (Sorry, I am not unformal us u, so please fill what ever u want) அக்கறை எங்களுக்கு வேண்டாம்... அப்படி அக்கறைகொண்டவன் தான் எங்களுக்கு முதல் எதிரி...

பல நூறு ஆண்டுகளாக இப்படி நூதன பிரச்சாரம் நடந்துகொண்டே தான் இருக்கிறது, இட ஒதிக்கீடு வேண்டாம் சொல்வது இபோதைய இளைஞகள் மத்தியில் ஒரு மோகம். இது தான் சமூக அக்கறையை என்பது போல் தோற்றம் உருவாக்கி விட்டார்கள்.. நீயும் அதை பின்பற்றுவது ஆச்சிரியம் இல்லை...

//but there are people from the so called “upper caste” who suffer due to the reservation and there are also some lower caste guys who remove their gold chain/rings and get into the principal’s room to accept the money sanctioned for them.. for both the cases you don’t have to look beyond our friends for examples..//

உன்னால் பாதிக்கப்பட்ட ஒரு சில ஆட்களை காட்ட முடியும்... என்னால் உண்மையிலேயே பயன் அடைந்த பல கோடி குடும்பங்களை காட்ட முடியும்... இன்னும் பல கோடி குடும்பங்கள் இதனால் பயனடைய போகிறது என்பதும் உண்மை... ஒரு சில ஆட்கள் முக்கியமா இல்லை ஒரு சமுதாய முனேற்றம் முக்கியமா என்பதை நீயே முடிவு செய்துகொள்...






----- Original Message ----
From: Sooria Jeyaraman
To: ellistopp@yahoogrou ps.com
Sent: Wednesday, 24 September, 2008 5:20:49 PM
Subject: Re: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it


All rite.. First of all I wasn’t trying to start a debate or hurt anyone.. secondly the one and only way that the way I am now(good or bad) was due to an engineering free seat that I got using the caste quota so I totally understand the value of reservation, you are kinda preaching to the choir and I don’t need a REALITY example.. that story was just a story and I wasn’t trying to compare/insult anyone, it needed to be taken with a grain of salt..




Now to the matter.. I think you guys misunderstood what I was trying to say, I wasn’t rooting for taking out the reservation, I was suggesting an ‘economy’ based reservation not immediately but in the future.. In my humble opinion, there are people on both the sides of the fence who gets affected by the reservation. . as for the reality, there are plenty of examples that you can bring to the table where the dalits are getting suppressed.. I accept admit, not a percent of doubt about that.. but there are people from the so called “upper caste” who suffer due to the reservation and there are also some lower caste guys who remove their gold chain/rings and get into the principal’s room to accept the money sanctioned for them.. for both the cases you don’t have to look beyond our friends for examples.. now I’m not saying the majority of the people are like that but it’s a growing minority of people who gets benefited/not benefited because of reservation, why do you have to turn a blind eye on that.. All I was saying was if we are asking for a level playing field, apply it to everyone.. we shouldn’t be taking away the benefits from someone just because their ancestors had a good life. Again calm down your nerves, I totally understand the pathetic situation that still majority of our fellow human beings suffer just because they are dalits even in this “modern day” India, c


Packia, I too reflect the same sentiment as your last line, Manithanai manithanaai paarkira manapaanmai (I know it’s not anywhere close to happening now) and although I was seeing from the other side of the coin, I was also strongly suggesting the same thing ‘treat people as people’, its sad that no one got that!! I thought if we start doing that then the caste based reservation will become an economy based reservation, again not now but eventually.. you could’ve just told me that ‘dei venna nee pesrathu thappuda, puriyaama pesra ippo irukra nilamailla innum 50 yrsavathu minimum aagum to get dalit people accepted in the society’nnu you could have, rather than insulting as though I don’t understand.. sorry I cannot be as formal as you, what the fuck do you mean by ‘மேல்தட்டு பிரச்சாரம் வேண்டாம் நண்பா...’.. and why the fuck you guys think that people like me won’t understand.. immediately don’t point me to an example of dalit suppression, I get it TOTALLY, Ok.. I’m just trying to understand me better and understand why the thing understood by you guys is perceived as not understood by us..Though selfish, I too have some social responsibility, at least that’s what I think and Though not as committed, we too want to be a part of a change that brings prosperity..




I know you guys would be thinking that I totally don’t know what’s happening in the actual field(which is most likely true) and talking as though we are in an ideal world but all I was saying was we totally understand the insults and in injustice done to a dalit individual which is atrocious and shouldn’t be happening at all but we should also try to understand the affected people from the other side which might be a minority now but might not be forever, if not we’ll be moving towards a wrong direction, again not now but eventually ..



Sooria

--- On Wed, 9/24/08, Somu Kumar wrote:

From: Somu Kumar
Subject: Re: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it
To: ellistopp@yahoogrou ps.com
Date: Wednesday, September 24, 2008, 2:49 PM



I very strongly agree with Packia.

Its a sad joke from the author to compare SC/ST students to grasshoppers. They are working hard in their own level but it may not /should not be compared with the so-called "forward" caste students because the main thing to be asked is: Where is the "LEVEL PLAYING FIELD"?

When these folks can study in schools like SDA, TVS & VIKSAS, have 4 tuitions, special coaching & a two-wheeler to hop around to all these and finally get two year special coaching for IITs while the poor dalit student in village won't have a proper school to attend. He has not idea what entrance is and how to face competitive exams. We should understand that its not just because of poverty but mainly because of systematic oppression happened over centuries. His grandfathers were kicked out of schools and made to do menial jobs which is the reason for his illitirate family background.

The same government which is subsidizing those in towns with good power connection, good schools, good roads etc, are letting old govt schools degrade further in which the dalit students study. How is it justified?

So, to me, its actually asking Usain Bolt to run in special olympics competing against handicapped runners. So, it is Social Justice thats playing in to make the playing field even and hence reservation.

Unfortunately, all these Ant & Grasshoper story evolves in IITs by just seeing few folks who are wealthy for generations but still use SC quota. They are failing to understand that those creamy layer is less than 1% of all Dalits and not representative of majority who are still suffering.

Remember khairlanji??? this is still the story of Dalits in rural areas.

-- Somu


2008/9/23 Packiarajan S



Can you tell me one strong reason to check back the reality?...

I can list u the REALITY of backward people in India, If u need.

இட ஒதிக்கீடு பொருளாதார முன்னேற்றத்துக்கு மட்டுமல்ல நண்பா.... சமுக நீதிக்காகவும் தான்...

இன்னும் தாழ்த்தப்பட்ட என் உறவுகள் சாமி கும்பிட கூட கோயிலுக்குள்ள போகமுடியாத சமுக நீதி நிலவுகிற சூழ்நிலையில இந்தமாதிரி மேல்தட்டு பிரச்சாரம் வேண்டாம் நண்பா...

மனிதனை மனிதனாக மதிக்காத நாட்டுல இருக்கோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்...




----- Original Message ----
From: Sooria Jeyaraman
To: ellistopp@yahoogrou ps.com
Sent: Tuesday, 23 September, 2008 12:36:49 PM
Subject: [ellistopp] FW: The Ant And The Grasshopper [Old Story - New Version] Really nice one go through it



Samuthaaya aarvalar kovichukittalum, this is true.. being brought up by (some) reservation, I shouldn't be the one criticizing it but we need a check back on reality..

Soori


An Old Story:

The Ant works hard in the withering heat all summer building its house and laying up supplies for the winter.

The Grasshopper thinks the Ant is a fool and laughs dances plays the summer away.

Come winter, the Ant is warm and well fed. The Grasshopper has no food or shelter so he dies out in the cold.


New Indian Version:

The Ant works hard in the withering heat all summer building its house and laying up supplies for the winter.

The Grasshopper thinks the Ant's a fool and laughs dances plays the summer away.

Come winter, the shivering Grasshopper calls a press conference and demands to know why the Ant should be allowed to be warm and well fed while others are cold and starving.

NDTV, BBC, CNN show up to provide pictures of the shivering Grasshopper next to a video of the Ant in his comfortable home with a table filled with food.

The World is stunned by the sharp contrast. How can this be that this poor Grasshopper is allowed to suffer so?

Arundhati Roy stages a demonstration in front of the Ant's house.

Medha Patkar goes on a fast along with other Grasshoppers demanding that Grasshoppers be relocated to warmer climates during winter .

Mayawati states this as `injustice' done on Minorities.

Amnesty International and Koffi Annan criticize the Indian Government for not upholding the fundamental rights of the Grasshopper.

The Internet is flooded with online petitions seeking support to the Grasshopper (many promising Heaven and Everlasting Peace for prompt support as against the wrath of God for non-compliance) .

Opposition MPs stage a walkout. Left parties call for 'Bengal Bandh' in West Bengal and Kerala demanding a Judicial Enquiry.

CPM in Kerala immediately passes a law preventing Ants from working hard in the heat so as to bring about equality of poverty among Ants and Grasshoppers.

Lalu Prasad allocates one free coach to Grasshoppers on all Indian Railway Trains, aptly named as the 'Grasshopper Rath'.

Finally, the Judicial Committee drafts the ' Prevention of Terrorism Against Grasshoppers Act' [POTAGA], with effect from the beginning of the winter.

Arjun Singh makes 'Special Reservation ' for Grasshoppers in Educational Institutions in Government Services.

The Ant is fined for failing to comply with POTAGA and having nothing left to pay his retroactive taxes,it's home is confiscated by the Government and handed over to the Grasshopper in a ceremony covered by NDTV.

Arundhati Roy calls it ' A Triumph of Justice'.

Lalu calls it 'Socialistic Justice '.

CPM calls it the ' Revolutionary Resurgence of the Downtrodden '

Koffi Annan invites the Grasshopper to address the UN General Assembly.

Many years later...

The Ant has since migrated to the US and set up a multi-billion dollar company in Silicon Valley,

100s of Grasshoppers still die of starvation despite reservation somewhere in India ,

..AND

As a result of losing lot of hard working Ants and feeding the grasshoppers, India is still a developing country...!! ! :) :) :)

Saturday, August 02, 2008

குசேலனை புறக்கணிப்போம்...

மறுபடியும் தன் உண்மை முகத்தை கட்டிவிட்டார் திருவாளர் நடிகன் ரஜினி... அதில் ஆச்சிரியம் ஒன்றும் இல்லை..

"நக்கி பொழைக்கிற நாய்க்கு செகென்ன சிவலிங்கம் என்ன?.."

அன்று உண்ணாவிரதத்தில் தமிழன் சத்தியராஜ் முன் பேசி தன்னை தாறுமாறாக கிழித்து ஏற்படுத்திய நிர்பந்தத்தின் காரணமாக ஏதோ உளறிவிட்டு, கர்நாடகதுக்குள்ளே போனால் உதைப்பானே என்று பயந்து எப்போது மன்னிப்பு கேட்டு மண்டி இடலாம் என காத்திருந்தவர்க்கு கிடைத்த சாக்கு 'குசேலன்'. கேட்டுவிட்டார்... அதை விடுத்து அந்தபடத்தின் வியாபர லாபத்திற்காக, தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஏற்படுத்தக்கூடாது என்பதற்காக மன்னிப்பு கேட்டார் என செய்தி வெளியாவதை பார்த்தால் சிரிப்பு தான் வருது...

ரஜினி நடிச்ச சிவாஜி உலகம் பூராம் பிச்சுகிட்டு ஓடுது, இங்கிலாந்துல முதல் பத்து எடத்துல இருக்கு, அமெரிக்காவில் ஆங்கிலபடத்துக்கு மேல வசூல் ஆகுது,(மொழியே இல்லாத தென் ஆப்பிரிக்க காட்டுக்குள்ள ௧00 நாள் ஓடுது), தமிழனுக்கு இதனால ரெம்ப பெருமைன்னு பல ஊடகம் கொஞ்ச நாளைக்கு படம் ஒட்டியதே... அப்புறம் எதுக்கு திருவாளர் ரஜினி இந்தியாவில் இருக்க ஒரு மாநிலத்திடம் (மாநிலத்தில் இருக்கும் கன்னட வெறியர்களிடம்) மன்னிப்புகேட்டு படம் ஒட்டி தயாரிப்பாளரை காப்பாத்தனும்னு நினைக்கிறார்.. உலகம் பூராம் வராத வசூலா கர்நாடகத்தில் இருந்து வந்து விட போகிறது.. ஆக அவர் மன்னிப்பு கேட்டது தயாரிப்பாளரை காப்பாத்தும்(?) பணத்திற்காகவோ, படம் ஓட்டுவதற்காகவோ மட்டும் அல்ல...

இனி நான் அப்படி பேசமாட்டேன் என்று குழந்தைகள் கதறுவதுபோல் கதறி இருக்கிறார் அவரை பொய் அவர் மன்னிப்பு கேட்கவில்லை வருத்தம் தான் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள் சில மேதாவிகள். இவர்களை என்ன சொல்வது???????

"நான் பாடம் கற்றுக்கொண்டுவிட்டேன்" என வேறு சொல்லி இருக்கிறார். கர்நாடககாரர்களிடம் என்ன பாடம் கற்று கொண்டார் என்று கடவுளேக்கே வெளிச்சம்... ஆனால் தமிழனை அடித்து ஒடுக்கும் கன்னடனிடம் மன்னிப்பு கேட்டு ஒட்டுமொத்த தமிழினத்தையும் அவமானபடுதிவிட்டார் என்பது திண்ணம்...
தமிழன் ஏமாளி, மானம்கேட்டவன் என நன்றாக தெரிந்ததால் தான் தைரியமாக செய்திருக்கிறார்...

நாம் அவ்வாறு இல்லை... நமக்கும் தமிழ் இன உணர்வு இருக்கிறது, மானம் என்று ஒன்று இருக்கிறது.... சுயமரியாதை என்று ஒன்று இருக்கிறது.. உப்பு போட்டு தான் சாப்பிடுகிறோம் என்பதை நிரூபிக்கும் விதமாக திருவாளர் நடிகன் ரஜினி நடித்த படத்தை புறக்கணிப்போம்.

தமிழனுக்கும், தமிழச்சிக்கும் பிறந்த யாவரேனும் அந்த படத்தை போய் பார்த்தால் அவர்களின் பிறப்பை சந்தேகபடுவதை தவிர வேறு வழி இல்லை.....

Wednesday, July 23, 2008

கருப்பு தினம்...

25 வருடங்கள் ஓடிவிட்டன...தமிழர்கள் வாழ்வில் எத்தனை நாள்கள் கடந்து போனாலும் இந்த நாளை மறக்க முடியாது.. மறக்க கூடாது... நம் தமிழ் உறவுகளின் சுதந்திர வாழ்வை அடியோடு மாற்றிய நாள்.. அவர்களின் ஜனநாயக குரல்வளைகள் நெறிக்க பட்ட நாள்... மண்ணெங்கும் தமிழ் ரத்தம் சிதறி ஓடிய அதிபயங்கர தினம் அது..

ஜூலை 23 ஈழத்தமிழர்களின் கருப்பு நாள்...

சிங்கள இனவாத அரசு நம் தமிழ் சொந்தங்களின் மேல் ஈவு இரக்கமற்ற காட்டுமிராண்டி அடக்குமுறைகளை கட்டவிழ்த்த நாள்...
மறைந்த நம் உறவுகளை வணங்கி... கூடிய விரைவில் தேசிய தலைவரின் தலைமையில் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிப்போம்....



Tuesday, July 22, 2008

யார் தீவிரவாதி?.....

சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவிப்பு
[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 12:01 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்]


ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 ஆம் நாள் வரையான காலப்பகுதியில் சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முன்னிட்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அதிகாரபூர்வமாக போர் நிறுத்தத்தினை அறிவித்துள்ளனர்.
இது தொடர்பில் இன்று செவ்வாய்க்கிழமை தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை நடுவப் பணியகம் விடுத்துள்ள அறிக்கை:

பரந்துபட்ட தென்னாசியப் பிராந்தியத்தில் பொருளாதார அபிவிருத்தியை மேம்படுத்தி, நீதி, சமத்துவம், சமாதானம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு புதிய, ஒத்திசைவான உலக ஒழுங்கை வனைந்துவிடும் உயரிய நோக்கோடு, சார்க் மாநாடு பதினைந்தாவது தடவையாகக் கூடுவதையிட்டு தமிழீழ மக்கள் சார்பில் எமது உளப்பூர்வமான வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

கடந்த அறுபது ஆண்டுகளாகத் தமிழரின் தேசியப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வை முன்வைக்கச் சிங்கள அதிகாரபீடம் மறுத்து வருகின்றது. தமிழருக்கு நீதி வழங்கச் சிங்களத் தேசம் தயாராக இல்லை.

சிங்களத் தேசத்தின் அரசியல் இன்று போராகப் பேய்வடிவம் எடுத்து நிற்கின்றது. இனவாதச் சிங்கள அரசு இராணுவத்தீர்வில் நம்பிக்கை கொண்டு நிற்பதால், போர் நாளுக்குநாள் தீவிரமடைந்து விரிவாக்கம் பெற்றுவருகின்றது.

தமிழர் தாயகத்தை ஆக்கிரமித்து, அடிமை கொள்ளவேண்டும் என்பதில் சிங்களத் தேசம் வெறிகொண்டு நிற்கின்றது. சிங்களத் தேசம் ஏவிவிட்டிருக்கும் இந்த ஆக்கிரமிப்புப் போரை எதிர்த்து, எமது விடுதலை இராணுவம் ஒரு தற்காப்புப் போரையே இன்று நடாத்தி வருகின்றது.

சிங்கள அரசு போர் என்ற போர்வையில் தமிழ் மக்களைக் கொடுமைப்படுத்திக் கொன்றொழித்து வருகின்றது. ஒட்டுமொத்தத் தமிழினமும் படிப்படியாக ஒடுக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவரும் கோரமான உண்மை இருட்டடிப்புச் செய்யப்படுகின்றது.

செய்தித்தடை என்ற பெயரில் தமிழரின் நீதியான போராட்டம் மீது ஒரு இரும்புத்திரை போடப்பட்டிருக்கின்றது. தமிழரின் சுதந்திர இயக்கத்தையும் அது நெறித்துள்ள விடுதலைப் பாதையையும் களங்கப்படுத்தும் வகையில் போலியான, பொய்யான பரப்புரை கட்டவிழ்த்து விட்டப்பட்டிருக்கின்றது. இதனால் தமிழரின் விடுதலைப் போராட்டம் பற்றி உலகில் தவறான மதிப்பீடுகளும் தப்பான அபிப்பிராயங்களும் நிலவிவருகின்றன. இது எமக்கு ஆழந்த கவலையைத் தருகின்றது.

உலக நாடுகளுடனும் எமது பிராந்திய அயல் நாடுகளுடனும் நட்புறவை வளர்த்துக்கொள்ளவே நாம் என்றும் விரும்புகின்றோம். இதற்கான புறநிலைகளை உருவாக்கி, ஒரு நட்புறவுப் பாலத்தைக் கட்டியெழுப்புவதிலும் இதயசுத்தியோடு இருக்கின்றோம்.

தமிழீழ தேசத்தினதும் தமிழீழ மக்களினதும் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தி, பரஸ்பர நம்பிக்கையை வளர்த்துவிட விரும்புகின்றோம். இந்த நல்லெண்ண நடவடிக்கையாக, சார்க் மாநாடு நடைபெறுவதையிட்டு ஜூலை 26 முதல் ஓகஸ்ட் 4 வரையான காலப்பகுதியை இராணுவ நடவடிக்கைகள் அற்ற அமைதி நாட்களாகக் காத்து, ஒருதலைப்பட்சமாகப் போர் நிறுத்தத்தைக் கடைப்பிடித்து, மாநாடு வெற்றிபெற ஒத்துழைப்போம் என்பதை எமது விடுதலை இயக்கம் மகிழ்ச்சியோடு அறியத்தருகின்றது.

இதேநேரம், சிங்கள ஆக்கிரமிப்புப்படைகள் எமது தேசத்தினதும் எமது மக்களினதும் நல்லெண்ண நடவடிக்கையை மதிக்காது, அத்துமீறி அடாவடியான வலிந்த தாக்குதல்களில் ஈடுபட்டால், எமது மக்களைப் பாதுகாத்துக்கொள்ளும் தற்காப்பு நடவடிக்கையில் மாத்திரம் ஈடுபட எமது விடுதலை இயக்கம் நிர்ப்பந்திக்கப்படும்.

மாநாடு வெற்றியாக அமைய வாழ்த்துவதோடு, எமது பிராந்தியத்தைச் சேர்ந்த இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஸ், ஆப்கானிஸ்தான், சிறிலங்கா, நேபாளம், பூட்டான், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கு எமது நல்லாதரவையும் தெரிவித்துக்கொள்கின்றோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளின் போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரிப்பு
[செவ்வாய்க்கிழமை, 22 யூலை 2008, 01:08 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்]
தமிழீழ விடுதலைப் புலிகளின் ஒருதலைப்பட்சமான போர் நிறுத்த அறிவிப்பை சிறிலங்கா அரசு நிராகரித்துள்ளது.
வடபோர் முனையில் எதிர்நோக்கி வரும் தொடர்ச்சியான பின்னடைவுகளால் நலிவடைந்துள்ள புலிகளின் தந்திரோபாய நகர்வே இது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், விடுதலைப் புலிகளின் போர்நிறுத்த அறிவிப்பை ஏற்றுக்கொள்வதற்கு அரசு தயாரில்லை என்றும் புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டால் வந்தால் மாத்திரமே அரசு போர் நிறுத்தத்தை அறிவிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, சிறிலங்கா சமாதான செயலகத்தின் பணிப்பாளர் ரஜீவ விஜயசிங்க கூறுகையில், விடுதலைப் புலிகளின் இந்த அறிவிப்பு சமாதான அனுசரணையாளர்களான நோர்வேயின் ஊடாக விடுக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் அவ்வாறல்லாமல் புலிகள் தரப்பிலிருந்து நேரடியாக வந்திருக்கும் இந்த அறிவிப்பை சிறிலங்கா அரசு ஏற்றுக்கொள்ளாது என்றும் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் இப்படியான அறிவிப்புக்கள் கடந்த காலங்களில் விடுக்கப்பட்டபோதும், அந்த அறிவிப்பை விடுத்த காலப்பகுதியை தம்மை இராணுவ ரீதியாக தயார்படுத்திக்கொள்ளவே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். கடந்த முப்பது வருடங்களாக விடுதலைப் புலிகளிடமிருந்து கற்றுக்கொண்ட பாடம் இது. ஆகவே, இப்படியான சந்தர்ப்பங்களில் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று சிறிலங்காவின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.


யார் தீவிரவாதி, யார் பயங்கரவாதி என இப்பொது தெரிகிறதா?... இலங்கை பயங்கரவாத அரசின் உண்மை முகத்தை சர்வதேச சமுகம் இபோதேனும் புரிந்து கொள்ள வேண்டும்... புலிகளின் , ஈழதமிழ் மக்களின் கோரிக்கைகையை அண்டை நாடுகள் அனுசரணையுடன் அணுகவேண்டும்...

Tuesday, April 29, 2008

என்னை கவர்ந்த பாடல்கள்...











Get this widget Track details eSnips Social DNA



Get this widget Track details eSnips Social DNA






நான் ரசிக்கும் என் இளையராஜாவின் இனிய அரிய கானங்கள்...

Sunday, April 27, 2008

அவன் ________ குடிடா........


அனைவருக்கும் சமத்துவமாக கல்வி வழங்குவதே தேசியத் தலைவரின் பெருவிருப்பு: பா. நடேசன்


அனைவருக்கும் சமத்துவமாக கல்வியை வழங்க வேண்டும் என்பதில் தமிழீழத் தேசியத் தலைவர் பெருவிருப்பு கொண்டுள்ளார் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார்.



கிளிநொச்சியில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர சாதாரண தர தேர்வில் சித்தி எய்திய மாணவர் மதிப்பளிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு அவர் பேசியதாவது:தமிழ் மாணவர்களின் கல்வியை சிங்கள அரசு அழிக்க வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு செயற்பட்டு வருகின்றது. ஆனால் எமது போராட்டம் போர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் நெருக்கடியான சூழலிலும் தமிழீழத் தேசியத் தலைவரின் உயரிய திட்டங்களுடன் மாணவர்களின் கல்வியை வளப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது. நகர, கிராம மாணவர்கள் என்ற வேறுபாடின்றி எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க வேண்டும் என்பது எமது தேசியத் தலைவரின் பெரு விருப்பமாகும்.


தலைவரின் எண்ணங்களுக்கு அமைவாக மாணவர்களின் கல்வியை உயர்த்துவதற்கு நாமும் செயற்பட்டு வருகின்றோம். ஆனால் சிறிலங்கா அரசானது தமிழ் மாணவர்களின் கல்வியை சிதைத்து விடுதலைப் போராட்டத்திலிருந்து இளைய தலைமுறையை விலக்கி வைப்பதற்கு முயற்சி செய்து வருகின்றது. அதற்காக பல தடைகளையும் ஏற்படுத்தி வருகின்றது. சிங்கள அரசின் தடைகளை தகர்த்து எறிந்து மாணவர்கள் கல்விப் பாதையில் முன்னேறிச் செல்ல வேண்டும். போர்ச் சூழலை நாம் காரணங்களாக கூறிக்கொண்டிருக்க முடியாது. நம்பிக்கையுடன் கல்வியில் மாணவர்கள் அக்கறை செலுத்தி முன்னேற வேண்டும் அதற்காக எமது விடுதலை அமைப்பு, மாணவர் அமைப்பின் ஊடாக சாந்தி, தேவன், மாறன் போன்ற பல இல்லங்கள் ஊடாக கல்விக்கு பெரும் பங்காற்றி வருகின்றது என்றார் பா.நடேசன்.


இந்தியாவில் பல ஏற்ற தாழ்வுகளையும், சமூக முன்னேற்ற தடைகளையும் போக்கும் என நம்பப்படும் ஆனால் பல வருடங்களாக நடைமுறை படுத்தப்படாமல் இருக்கும் சமச்சீர் கல்வி முறையை இந்தியாவிற்கு முன்னோடியாக தமிழின தலைவர் பிரபாகரன் தமிழீழத்தில் நடைமுறை படுத்த போகிறார்...

தன் மக்கள் மீதும், தன் இனத்தின் மீதும், தன் மொழியின் மீதும், தன் மண் மீதும் பற்றுள்ள ஒரு மகத்தான தலைவரை, வழிகாட்டியை பெற்றிருக்கும் தமிழீழம் புண்ணியம் பண்ணிய பூமி...

எங்க ஊர்ல நல்லா படிக்காதவனையோ இல்ல நல்லா வேலை பார்க்காதவனையோ நல்லா பன்னுபவனோடு ஒப்பிட்டு "அவன் ________ குடிடா, அப்போவது அவன் போல அறிவு வருதான்னு பாக்கலாம்" சொல்லி திட்டுவார்கள்... அது தான் என் நியாபகத்துக்கு வருது இப்போ...

Wednesday, April 23, 2008

கர்நாடக போதைக்கு ஊறுகாய் தமிழகம்!

ஒகேனக்கல் பிரச்னை 'அடைமழை விட்டாலும் செடிமழை விடாத' கதையாக இன்னும் தொடர்கிறது!


மே 10-ம் தேதி கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், பெங்களூருவைத் தலைமைய கமாகக் கொண்டு கர்நாடகா மற்றும் தமிழகத்தில் இயங்கி வரும் 'தனித்தமிழர் சேனை' அமைப்பு அங்குள்ள அரசியல்வாதிகளின் சுயரூபத்தைத் தோலுரித்துக் காட்டத் தயாராகிவருகிறது!


அந்த அமைப்பின் நிறுவனர் நகைமுகன் அதுபற்றி நம்மிடம் விரிவாகப் பேசினார். ''ஆரம்பத்திலிருந்து கவனித்துப் பார்த்தாலே தெரியும். காவிரிப் பிரச்னை எழும்போதெல்லாம், ஒன்று... கர்நாடகத்தில் தேர்தல் வரும் நேரமாக இருக்கும். அல்லது, அங்கு ஆளுங்கட்சிக்கு வேறு ஏதாவது பெரிய பிரச்னை புகையத் தொடங்கியிருக்கும். இம்மாதிரி சந்தர்ப்பங்களிலிருந்து கர்நாடக மக்களையும்


எதிர்க்கட்சிகளையும் திசைதிருப்பவே காவிரிப் பிரச்னை பயன்படுத்தப்பட்டிருக்கிறது. மற்றபடி, கர்நாடகத்தில் எஸ்.எம்.கிருஷ்ணா, தேவகவுடா, எடியூரப்பா, வாட்டாள் நாகராஜ், இன்னுமுள்ள துண்டு துக்கடா அரசியல்வாதிகள் யாருக்குமே கர்நாடக மக்கள் மீது உண்மையான அக்கறை இல்லை.


காவிரிப் பிரச்னைக்கு இணையாக கர்நாடகத்தில் பல நிரந்தரப் பிரச்னைகள் காலங்காலமாக இருந்துவருவது தமிழக அரசியல்வாதிகள் பலருக்குத் தெரியாது. தமிழகத்தில் 80 சதவிகிதத்தினர் தமிழர்கள்; கேரளாவில் 70 சதவிகிதத்தினர் மலையாளிகள்; ஆந்திராவில் 66 சதவிகிதத்தினர் தெலுங்கர்கள்; ஆனால், கர்நாடகத்தில் 40 சதவிகிதம் மட்டுமே கன்னடர்கள் இருக்கின்றனர். மீதமுள்ள 60 சதவிகிதத்தினர் கன்னடர் அல்லாதோர். அதில், பெரும்பான்மையாக 28 சதவிகிதம் தமிழர்கள். கூர்க் பகுதியில் (குடகு மலைப்பகுதி) கொடவா மொழி பேசும் மக்கள், மங்களூர், உடுப்பியில் துளு மொழி பேசும் மக்கள், பெல்காம் பகுதியில் மராட்டி மொழி பேசும் மக்கள் மற்றும் கர்நாடகாவின் பல பகுதிகளிலும் தெலுங்கு, மலையாளம் பேசும் மக்கள் உள்ளனர்.


இவர்களுக்கும் மாநில அரசுக்கும் பல்வேறு பிரச்னைகள் எப்போதும் புகைந்தவண்ணம் இருக்கிறது. பெல்காம் (மகாராஷ்டிர எல்லைப் பகுதி) பகுதியில் கர்நாடகாவுக்கும் மகாராஷ்டிராவுக்கும் எல்லைப் பிரச்னை இருக்கிறது. இந்தப் பிரச்னையில் சிவசேனாவும், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ§ம் கர்நாடகத்தை பகிரங்கமாகவே கண்டித்துவருகின்றன. மகாராஷ்டி ரத்தில் 'மகாராஷ்டிரா ஏகிகரன் சமிதி' (Maharastra Ekikaran Samiti) என்ற அமைப்பு கர்நாடகத்திலுள்ள சில பகுதிகளைக் கேட்டுப் போராடிவருகிறது. இதற்காக சில ஆண்டுகளுக்கு முன் 'மகாஜன் கமிட்டி' அமைக்கப்பட்டு, அந்த கமிட்டியும் சில பகுதிகளை இரு மாநிலங்களும் பரஸ்பரம் மாற்றிக் கொடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிக்கை சமர்ப்பித்தும், கர்நாடக அரசின் அலட்சியத்தால் இதுவரை இப்பிரச்னை தீர்க்கப்படவில்லை


மங்களூர், உடுப்பி உள்ளிட்ட பகுதிகளில் பெரும் பான்மையாக வசிக்கும் துளு மொழி பேசும் மக்கள், பல ஆண்டுகளாக தங்களுக்கென தனிநாடு கேட்டுப் போராடி வருகின்றனர். அவர்கள் போராடுவதற்கும் நியாயமான காரணம் இருக்கிறது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு என்று திராவிட மொழிகள் ஐந்து. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது துளு பேசுபவர்களுக்கு மட்டும் தனி மாநிலம் தரப்படவில்லை. இதனால், அவர்கள் 'துளுநாடு சேனா' என்ற அமைப்பை நிறுவிப் போராடிவருகின்றனர். கொடவா மொழி பேசும் மக்கள் குடகு நாடு கேட்டுப் போராட்டம் நடத்துகிறார்கள்'' என்று சொல்லிக்கொண்டே வந்த நகைமுகன், தமிழர் பிரச்னைக்கு வந்தார்- ''கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த கொள்ளேகால் அநியாயமாக முன்பு மைசூருடன் இணைக்கப்பட்டு விட்டது. இப்படி இன்னும் பல பகுதிகளைச் சொல்லலாம். இதை எல்லாம் நாம் திருப்பிக் கேட்டால் கர்நாடகம் தாங்குமா?


இப்படித் தங்கள் மாநிலத்துக்குள்ளும், பிற மாநிலங் களிடமும் இருக்கும் பிரச்னைகளைத் தேர்தல் நேரத்தில் மறக்கடித்து திசைதிருப்ப ஒவ்வொரு முறையும் காவிரிப் பிரச்னை எழுப்பப்படுகிறது. கர்நாடகாவில் கன்னடர்களுக்கு அடுத்து மெஜாரிட்டியாக இருக்கும் தமிழனை அடித்து நொறுக்கி, அவனை பயம் கொள்ளச் செய்துவிட்டால் தனி மாநிலம் கேட்கும் மற்ற மொழி பேசும் மக்கள் பயந்துகொண்டு தாங்களாகவே அடங்கி விடுவார்கள் என்று நினைக்கிறது கர்நாடகம். இந்த நிலையில், தமிழகத்திலுள்ள அரசியல்வாதிகள் அலட்சியமாக உள்ளனர்.


இதனால் நாங்கள் களத்தில் இறங்கியுள்ளோம். ஒகேனக்கல் கூட்டு குடிநீர்த் திட்டத்தை நிறுத்தவோ, ஒத்திப்போடவோ எந்த அரசியல்வாதிக்கும் உரிமை யில்லை என்பதை சட்ட விதிமுறைகளின் ஆதாரங்க ளுடன் விளக்கி, தேசிய மனித உரிமை ஆணையம், தமிழ் நாடு மனித உரிமை ஆணையம் மற்றும் கர்நாடகா மனித உரிமை ஆணையம் ஆகியவற்றிடம் மனுத் தாக்கல் செய்துள்ளோம். இதில் நியாயம் கிடைக்கும்வரை ஓயமாட்டோம்'' என்று அனல் தெறிக்க முடித்தார் நகைமுகன்!

தொண்டை வரள சத்தம் போடுகிறோம்.தவிச்ச வாய்க்குத் தண்ணீர் கிடைத்தால் சரி!


தண்ணீர்ப் பிரச்னை மட்டுமின்றி, கர்நாடக தேர்தல்களின்போது வாக்குச் சீட்டுக்களில் தமிழ் இடம் பெற வேண்டும் என்றும் 'தனித்தமிழர் சேனை' போராடி வருகிறது. இதுகுறித்து நகைமுகன் நம்மிடம், ''தமிழகத்தில் உடுமலைப்பேட்டை பகுதியில் தெலுங்கிலும், கிருஷ்ண கிரி, ஓசூர் உள்ளிட்ட இடங்களில் கன்னடத்திலும், நாகர்கோவில் பகுதியில் மலையாளத்திலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்படுகிறது. கர்நாடகத்தில் கன்னடர்களுக்கு அடுத்தபடியாக அதிகம் வசிக்கும் தமிழர்கள் இருக்கும்போது, அங்கு தமிழிலும் ஓட்டுச் சீட்டு அச்சடிக்கப்படுவதுதான் நியாயம். இதுகுறித்து கர்நாடகா மற்றும் தேசிய தேர்தல் கமிஷனிடம் மனு அளித்துள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தை அணுகவும் தயாராக இருக்கிறோம்'' என்றார்.


நன்றி - ஜூனியர் விகடன்.



இவ்ளோ பிரச்னையை வைத்துக்கொண்டே கர்நாடகம் இந்த ஆட்டம் போடுதே. அதெல்லாம் இல்லேன்னா இந்நேரம் தமிழனை குழி தோண்டி பொதைத்திருப்பார்கள்.நகைமுகன் போன்ற தமிழ் உணர்வாளர்கள் இருக்க போய் தான் கர்நாடக தமிழன் இந்த அளவுக்காவது பாதுகாப்போடு இருக்கான். தொடரட்டும் அவர் பணி.... வாழ்க அவர் தொண்டு...

Friday, April 18, 2008

உலகத் தமிழர்களுக்கு ஒரு கடிதம்.......

(கண்கள் நிறையக் கனவுகளோடும், துள்ளி விளையாடிய கால்களில் ஷெல்அடித்த ரணங்களின் வலியோடும் அகதி முகாமில் வாடும் புலம்பெயர்ந்த ஈழக் குழந்தையின் கிழிந்து போன சட்டைப்பைகளில் இருந்த உடைந்த பென்சிலின் ஒட்டுத்துண்டில் இந்தக்கடிதம் எழுதப்படுகிறது)
நலமுடன் இருக்கிறீர்களா? உலகத் தமிழர்களே? குண்டு விழாத வீடுகளில், அமெரிக்காவுடனான அணுகுண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது பற்றி அளவளாவிக் கொண்டிருப்பீர்கள், இடைஞ்சலான நேரத்தில் கடிதம் எழுதுகிறேனா?
எனக்குத் தெரியும், என் வீட்டுக் கூரையில் விழுந்த சிங்களவிமானத்தின் குண்டுகள் என்னைப் போல பல்லாயிரக்கணக்கான தமிழ்க்குழந்தைகளை அநாதை ஆக்கிய போது, நீங்கள் எதாவது நெடுந்தொடரின் நாயகிக்காகக் கண்ணீர் விட்டுக் கரைந்திருப்பீர்கள்......
எண் அம்மாவும் அப்பாவும் அரைகுறையாய் வெந்து வீழ்ந்தபோது, உங்கள் வீட்டு வரவேற்ப்பறைகளில் அரைகுறை ஆடைகளுடன் அக்காமாரெல்லாம் ஆடும் " மஸ்தானா, மஸ்தானாவின்" அரையிறுதிச் சுற்று முடிவுக்கு வந்திருக்கும்.
அண்ணனும், தம்பியும் நன்றாகப் படிக்கிறார்களா? அம்மா, அப்பாவின் மறைவுக்குப் பின்னால், எனக்குத் தலை வாரிவிட்டு, பட்டம்மா வீட்டில் அவித்த இட்டலி கொடுத்துப் பள்ளிக்கு அனுப்பிய அண்ணனும் இப்போது இல்லை, நீண்ட தேடலுக்குப் பின்னர் கிடைத்த அவன் கால்களை மட்டும் மாமாவும், சித்தப்பாவும் வன்னிக் காடுகளில் நல்லடக்கம் செய்தார்கள்.....அப்போதே எழுத வேண்டும் என்று ஆசைதான் எனக்கு, நீங்கள் இலங்கை கிரிக்கெட் அணியின் இந்தியச் சுற்றுப் பயணத்தை, இரவு பகல் ஆட்டமாய்ப் பார்த்திருந்தீர்கள்...அதனால் தான் எழுதவில்லை........
ஒலிம்பிக் தீபத்தின் சுடர்களை உலகம் முழுவதும், என்னைப்போல ஒரு மலை நாட்டு திபெத் சிறுவனும், அவன் இனத்துப்பெரியவரும் சந்து பொந்தெல்லாம் மறித்துத் தடுத்தபோது, எனக்கு உங்கள் நினைவு வந்தது.....
அதுமட்டுமல்ல, இந்திய அரசுகளின் உதவியோடு, இலங்கை ராணுவத்திற்கு நன்றி சொல்லும் திரைப்படச் சுருளின் பிரதிகளும் நெஞ்சில் நிழலாடியது.ஒரு பக்கம், இரங்கற்பா எழுதிக் கொண்டு, மறுபக்கம், நவீன ஆயுதங்களை அனுப்பி வைக்கும் உங்கள் கூட்டணித் தலைவர்கள் எல்லாம் நலமா தமிழர்களே? இன்னொரு முறை ஆயுதங்கள் அனுப்பும் போது மறக்காமல் ஒரு இரங்கற்பா அனுப்புங்கள், சாவின் மடியில் எங்களுக்கு ஒரு தமிழ்க் கவிதையாவது கிடைக்கும் அல்லவா?
இன்னொரு தமிழகத்தின் மறைவான இடத்தில் நீங்கள் இலங்கை ராணுவத்திற்கு பயிற்சி அளிக்கும் போது, குழந்தைகளையும், கர்ப்பிணிப் பெண்களையும் வலியின்றிக் கொல்வது பற்றி ஒரு வகுப்பெடுத்து விடுங்கள். கொஞ்சம் பாவமாவது குறையட்டும்.......
மாஞ்சோலையில் ஒரு மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தில், தம்பியின் பிஞ்சு உடல் நான்கைந்தாய் சிதறடிக்கப்பட்ட அந்த கோர நாளில் நாங்கள் எல்லாம் கூட்டமாய் அழுது கொண்டிருந்தோம், குழந்தைகள் இருக்கும் பள்ளிக்கூடங்களை தேடிக் கண்டு பிடித்து கொலை வெறியோடு உங்கள் "நேச நாட்டு" விமானங்கள் குண்டு மாரி பொழிந்த போது நீங்கள் இந்திய விடுதலையின் பொன் விழாக் கொண்டாட்டங்களுக்கான குறுஞ்செய்தி வாழ்த்துக்களில் களித்திருந்தீர்கள், உலகத் தொலைக்காட்சிகளின் நீங்கள் பார்த்து மகிழும் முதன் முறைத் திரைப்படங்கள் தடை படுமே என்று தான் அப்போது எழுதவில்லை,
)
எங்கள் இனப் போராளிகளை கொன்று குவித்து, நிர்வாணமாக்கி, இறந்த உடலுக்குக் கொடுக்கின்ற இறுதி மரியாதை இல்லாமல், எம் இறப்பை எள்ளி நகையாடிய உங்கள் " சார்க்" கூட்டாளியின் கொடிய முகம் கண்ட போதே எழுதி இருக்க வேண்டும்.அப்போது நீங்கள் கட்சி மாநாடுகளில் கவனமாய் இருந்தீர்கள், பெண்களின் இடுப்பில் பம்பரம் விட்ட களைப்பில் கட்சி துவக்கிய கேப்டன்களின் பின்னால் அணிவகுத்து நின்றீர்கள், நீங்கள் போட்ட வாழ்க கோஷங்களின் இரைச்சலில் எங்கள் நிஜக் கேப்டன்களின் வீரமரணம் கேள்விக் குறியாய்க் கலைந்து போனது, தமிழர்களே?
அப்பாவின் வயிற்றை அணைத்துக் கொண்டு, செப்பயான் குளத்தில் முங்கி எழுந்த நினைவுகளை மனதில் சுமந்து கொண்டு, வாரம் இரண்டு முறை அடிகுழாயில் அடித்து, அடித்து கொஞ்சமாய் ஒழுகும் தண்ணீர் நின்று போவதற்குள் ஓடி வந்து குளித்து விடுகிறேன் அகதி முகாமில்.முகாமின், தகரத் தடுப்புகளின் இடைவெளியில் தெரியும் பள்ளிக்கூடமும், அதிலிருந்து வரும் மதிய உணவின் வாசமும், அம்மாவின் மடியில் இருந்து, எப்போதும் கிடைக்கும் அன்பையும் எண் பழைய வாழ்வையும் நினைவு படுத்தும். ஆயினும் பாழும் வயிறு, பசி கலந்த வலி கொடுத்து பாய்ந்து ஓடி வரிசையில் நிறுத்தி விடும், அளந்து கொடுக்கப்படும் அவமானச் சோற்றுக்காய்......அப்போதெல்லாம் எழுதத் தோன்றும் எனக்கு, ஆனால் நீங்கள் பீஸாக் கடைகளின், வட்ட மேசைகளில் அமர்ந்து ஆங்கிலம் பேசிக் கொண்டிருந்தீர்கள், எழுதத் தோன்றவில்லை.....எனக்கு....
அமைதியாய் விடியும் பொழுதும்,
அழகாய்க் கூவும் குயிலும்,
தோகை விரிக்கும் மயிலும்,
காதல் பேசும் கண்களும்,
தாத்தா பிடித்த மீன்களில் அம்மா வைத்த குழம்பும்,
தாமரை மலரின் தாள்கள் பறிக்க நாங்கள் குதித்த குளங்களும்,
பக்கத்து வீட்டுப் பாண்டி அண்ணன் வேடு கட்டக் குவித்து வைத்த மணலும்,
அதில் சங்கு பொறுக்கி விளையாடிய என் தம்பியின் கால் தடங்களும்,
கருவேலன் காடுகளில் பொன் வண்டு பிடித்த என் பழைய நினைவுகளும்,
இனிமேல் எனக்குக் கிடைக்கவே கிடைக்காதா உலகத் தமிழர்களே?
)
எல்லோரும் சேர்ந்து மூட ஞானிக்கு எழுதிய நீண்ட கடிதமெல்லாம் வேண்டாம் அண்ணா, என் கேள்விகளில் எதாவது ஒன்றுக்கு, உங்கள் வீட்டில் கிழித்து எறியப்படும் நாட்காட்டித் தாள்களின் பின்புறமாவது பதில் எழுதுங்கள், உலகத் தமிழர்களே........
ஏனெனில் நீங்கள் எழுதப் போகும் பதிலில் தான் ஒரு இருண்டு போன இனத்தின் விடுதலையும், துவண்டு போன அகதிகளின் வாழ்க்கையின் மறுபிறப்பும் இருக்கிறது.

வலி கலந்த நம்பிக்கைகளுடன்,
தம்பி யாழினியனுக்காக (அண்ணன் கை.அறிவழகன்)
15 ஏப்ரல் 2008.
நன்றி- உலக தமிழ் மக்கள் அரங்கம் -அற்குட்

மனதை மிகவும் கனக்க செய்த கடிதம்... தமிழினமே எப்போது உன் மௌனம் களைப்பாய்...?????????

Thursday, April 17, 2008

இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து...

இலங்கைக்கும் சீனாவிற்கும் ஆன நெருங்கிய உறவு தொடர்பு இலங்கை இந்திய உறவுகளில் தாக்கம் செலுத்தியுள்ளதை ஸ்ரீலங்கா அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் அண்மைய சீன விஜயம் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்திருந்தார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட சாதாரண கேள்விகளுக்கு மிக பொறுமையாக அமைச்சர் பீரிஸ் பதில் அளித்திருந்தார். சில செய்திளார்கள் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான உறவு இந்தியாவை சீற்றமடைய வைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்கு பதிலளிக்க மறுத்த அமைச்சர் உடனடியாக செய்தியாளர் சந்திப்பில் இருந்து வெளியேறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கை இந்திய உறவில் விரிசல் நிலை ஏற்பட்டுள்ளமை தெளிவகா தென்படுவதாகவும் எனினும் அது குறித்து கருத்து வெளியிட்டு நிலைமைகளை மோசமாக்க விரும்பாமடலே அமைச்சர் செய்தியாளர் சந்திப்பில் .இருந்து வெளியேறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை இலங்கை சீன உறவுகள் குறித்தும் மகிந்த ராஜபக்சவின் சீன விஜயம் குறித்தும் இந்திய தரப்பிற்கு விளக்கமளிப்பதற்கு மகிந்த ராஜபக்சவின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் விரைவில் இந்தியாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டவுள்ளதாக தெரியவந்துள்ளது.
நன்றி - யாழ்.காம்
இந்தியாவிற்க்கு என்றைக்குமே சீனா ஒரு அச்சுறுத்தல் தான். அந்நாட்டுடன் உறவில் உள்ள எந்த நாடும் நமக்கு எதிரி நாடே. இலங்கை இப்பொது அந்நாட்டுடன் மிக நெருங்கி வருகிறது. சீனா உதவதற்கு ஒரே காரணம் இந்தியாவை அச்சுறுத்த வேண்டும் என்ற நோக்கம் தான் ஒழிய வேறொன்றும் இருக்க முடியாது. இதே போல் தான் பாகிஸ்தானோடும் நெருக்கம் காட்டி வருகிறது. இந்தியாவிற்கு பேரழிவை ஏற்படுத்தும் நோக்கத்துடனே இலங்கை நடந்து வருகிறது, பாதுகாப்பற்ற சூழலையும் உருவாக்கி வருகிறார்கள்

இந்தியா இப்போதாவது இலங்கையின் சுயநலபோக்கை புரிந்து கொண்டு அந்நாட்டுடன் இருக்கும் பாரிய உறவை நிறுத்தி அதை கண்காணிக்க வேண்டும். தமிழர்கள் மீதான தாக்குதல்களை நிறுத்துமாறு அழுத்தம் கொடுக்க வேண்டும். ஈழத்தமிழர்கள் இந்தியாவை தந்தை நாடென்று போற்றி மதித்து வருகிறார்கள். அதை புரிந்து கொண்டு தமிழீழ மலர இந்தியா வழிவகுத்தால் என்றுமே அவர்கள் இந்தியாவின் பாதுகாப்பிற்கு அரணாக விளங்குவார்கள் என்பதில் ஐயமில்லை...

Wednesday, April 16, 2008

தொடரும் ஒடுக்குமுறைகள்...

மலேசியாவின் பிரபல "மக்கள் ஓசை" நாளேட்டின் பிரசுர பெர்மிட்டைப் புதுப்பிக்க உள்துறை அமைச்சு மறுத்து விட்டது. மாற்றரசாங்க கட்சிகளின் செய்திகள் அந்நாளிதழில் பரவலாக வெளியிடப்பட்டது இதற்கு காரணம் எனக் கருதப்படுகிறது.

இது தொடர்பாக மக்கள் ஓசை பொது நிர்வாகி எஸ்.எம்.பெரியசாமியைத் தொடர்பு கொண்டபோது அச்செய்தியை உறுதிப்படுத்தினார். பெர்மிட்டைப் புதுப்பிக்க செய்துகொள்ளப்பட்ட விண்ணப்பம் ஏற்கப்படவில்லை என அமைச்சு கடிதம் அனுப்பியிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணம் எதுவும் குறிப்பிடப்படவில்லை. பெர்மிட் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே, ஜுலை மாதத்திலேயே, புதுப்பிப்பதற்கு விண்ணப்பம் செய்து விட்டதாக பெரியசாமி கூறினார். அக்டோபர் 15 திலிருந்து பெர்மிட் இல்லாமலேயே அது வெளியிடப்பட்டு வந்தது. அந்த நாளிதழில் மாற்றுக்கட்சிகளின் செய்திகள் குறிப்பாக கெஅடிலான் தலைவர் அன்வார் இப்ராகிம் பற்றிய செய்திகள் நிறைய வருவதுண்டு.
மக்கள் சக்தி இயக்கம் பற்றிய செய்திகளுக்கும் அதில் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. “உள்துறை அமைச்சின் முடிவுக்கு எதிராக முறையீடு செய்யப்போகிறோம்”, என பெரியசாமி கூறினார்.

நன்றி - மலேசியாஇன்று.காம்


இனவாத,பயங்கரவாத அரசுகளின் கோரதாண்டவங்கள் பத்திரிக்கை சுதந்திரத்தின் குரல் வலையை மிதித்து கொண்டே தான் ஆரம்பிக்கப்படுகின்றன. ஒரு இனத்தை அழிக்கவும், ஒடுக்கவும் அவர்களின் ஊடகங்களை தான் முதலில் ஒடுக்குகிறார்கள். 1970களில் இலங்கை அரசாங்கமும் முதலில் ஒடுக்கியது தமிழ் ஊடகங்களை தான். தமிழகத்தில் இருந்து வரும் சினிமா,பத்திரிக்கை என அனைத்து ஊடங்கங்களும் தடை செய்யப்பட்டு, தமிழகத்துடன் இருந்த இணைப்பை துண்டித்தனர்.

ஒரு நாட்டின் வளமான ஜனநாயகத்தை, நல்ல அரசாங்கத்தை, பொருளாதார வளர்ச்சியை அந்நாட்டின் பத்திரிக்கை சுதந்திரத்தின் அளவை வைத்தே கூறிவிடலாம். உலகில் நான்கில் மூன்று பங்கு மக்கள் வாழும் நாடுகளில் பத்திரிக்கை சுதந்திரம் மட்டுப்படுத்தபட்டே இருக்கிறதாக ஆய்வு சொல்கிறது. இருவகையாக சுதந்திரம் பறிக்கப்படுகிறது ஒன்று அரங்சங்க அனுமதி என்ற பெயரிலும் மற்றொன்று தவறான தகவலுக்கு தண்டனை என்ற முறையிலும் தான்.

1501 ஆண்டு போப் ஆறாம் அலெக்சாண்டர் என்பவர் தான் பத்திரிக்கைகளுக்கு கட்டுப்பாடு என்ற முறையை முதல் முறையாக கொண்டுவந்தார் என்கிறது வரலாறு. பத்திரிக்கை வெளியிடுபவர் எல்லோரும் சர்ச்சில் அனுமதி வாங்க வேண்டும் என்ற ஆணையை பிறப்பித்தார். அனுமதி பெறாதவர்களுக்கு தண்டனையும் வழங்கப்பட்டது. மத நம்பிக்கைக்கு எதிரான பிரச்சாரத்தை அடக்கவே அவ்வாறு செய்தார். இங்கிலாந்தில் தான் முதல்முதலாக பத்திரிக்கை சுதந்திரத்திற்கான போராட்டம் ஆரம்பித்தது. ஆனால் முதன் முதலில் பத்திரிக்கை சுதந்திரத்தை சட்டமாகியது அமெரிக்கா தான். "first amendment" என்ற பெயரில் உருவான அந்த சட்டம் தான் உலகளாவிய அளவின் பத்திரிக்கை சுதந்திரத்துக்கு அடிபோட்டது. "fourth எஸ்டேட்" நான்காம் தூண் என்று பத்திரிக்கை துறையை குறுப்பிட காரணம் அந்த சட்டம் தான்.

உலகில் அதிக பத்திரிக்கை சுதந்திரம் கொண்ட நாடுகள் பின்லாந்து, ஐஸ்லந்து, நெதர்லாந்து, நோர்வே, டென்மார்க், இர்லாந்து, ஸ்லோவொக்கியா, சுவிற்சர்லாந்து,நியூஜிலாந்து ஆகிய நாடுகள். குறைவான சுதந்திரம் கொண்ட நாடுகள் வட கொரியா, பர்மா, சீனா, வியேட்னாம்,நேபாளம், சௌதி அரேபியா, ஈரான் இறுதியாக இலங்கை. இதில் சீனா மற்றும் நேபாளத்தில் தவறான வார்த்தைகள், படங்களை பிரசுரிப்பதை அரசாங்கம் நினைத்தால் ௧ வருடம் வரை பத்திரிகையாளர்களுக்கு சிறை தண்டனை உண்டு.அதே போல் மேற்சொன்ன நாடுகளை சேர்த்து சில நாடுகளில் சர்ச்சைக்குரிய இடங்களுக்கு வெளிநாட்டு பத்திரிக்கையாளர்களை அந்நாட்டு அரசாங்க அனுமதிப்பதில்லை.


இடங்கள் :-

௧. செசென்யா, ரஷ்ய

௨. திருகோணமலை, இலங்கை

௩.மியான்மர், பர்மா

௪.பாபா, இந்தோனேசியா

௫.பெஷ்வர், பாகிஸ்தான்

௬.திபெத், சீனா

உலகில் பல்வேறு அமைப்புகள் பத்திரிக்கை சுதந்திரத்திற்காக போராடி வருகின்றன. "ஆர்டிகல் 19" என்ற மனித உரிமைக்கான அமைப்பு உலகளாவிய போராட்டத்தை இதற்காக நடத்தி வருகிறது. பத்திரிக்கை சுதந்திரத்திற்கான குழுமம் அண்ட் ஒரு அமைப்பும் 1981ஆம் ஆண்டில் இருந்து போராடி வருகிறது. இவர்களின் போராட்டத்தால் நேற்று கூட பாக்த்தாதில் அமெரிக்கா படையினரால் சிறைபிடிக்க பட்ட ஹுசைன் என்ற பத்திரிக்கையாளர் ௨ வருடங்கள் கழித்து மீட்கப்பட்டுளார். இப்படி பல்வேறு அமைப்புகள் உலகம் முழுவதும் இருக்கின்றன.
மொத்தத்தில் எங்கெல்லாம் ஊடங்களின் சுதந்திரம் நசுக்கப்டுகிறதோ அங்கெல்லாம் ஜனநாயத்தின் மூச்சு மெதுவாக நின்று கொண்டிருப்பதை தான் அர்த்தம்.

ஆடு நினையுதேனு ஓநாய் அழுகுது....

கோவை: பங்கு சந்தை வணிகத்தில் பிற மதத்தினர் முதலீடு செய்வதை அரசு கண்காணிக்க வேண்டும் என இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் கூறினார்.


கோவையை அடுத்த துடியலூரில் ராமகோபாலனுக்கு இந்து முன்னணி சார்பில் சதாபிஷேக விழா நடத்தப்பட்டது.அதில் கோவை வடக்கு மாவட்ட இந்து முன்னணி சார்பில் ராம கோபாலனுக்கு ரூ.81,000க்கான பண முடிப்பு வழங்கப்பட்டது.அதைப் பெற்றுக் கொண்ட ராமகோபாலன் பேசியதாவது:தமிழ்நாட்டில் அனைத்து இந்துக்களின் வீடுகளில் ராமாயணம், மகாபாராதம்,பகவத் கீதை போன்ற சமய நூல் வாங்கி வைப்பதோடு மட்டுமல்லாமல் அதை கண்டிப்பாக படிக்க வேண்டும்.


மதமாற்ற தடுப்புச் சட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும்.மதமாற்றத்தை பொதுமக்கள் விழிப்புணர்வுடன் எதிர் கொள்ள வேண்டும். பசுவதை தடை செய்ய வேண்டும். பசுக்களை போற்றி வளர்க்க வேண்டும்.


இந்துக்களுக்கு கிடைக்க கூடிய இடஒதுக்கீட்டை பிற மதத்தை சேர்ந்தவர்கள் பயன்பெறும் வகையில் இடஒதுக்கீடு அமைந்துள்ளதை மாற்ற வேண்டும்.


பிற மதத்தினர் பங்கு சந்தை வணிகத்தில் முதலீடு செய்வதை அரசு கண்காணிக்க வேண்டும்.என்னை கொலை செய்து விடுவேன் என மிரட்டல் விடுகிறார்கள். இதற்கு நான் கவலைப்படுவது இல்லை. நான் சேவை செய்யும் போது உயிர்விட ஆசைப்படுகிறேன் என்றார்.


நன்றி -தட்ஸ்தமிழ்.காம்


நம் நாட்டில் சென்சஸ் கணக்கு படி வறுமை கோட்டிற்கும் கீழ் அதாவது வீடு வாசல் இல்லாமல் இருப்பவர்கள் 27 சதவிகத மக்கள், அதே போல் 39 சதவிகத மக்கள் இன்னும் கல்வி அறிவற்றவர்களாக இருக்கிறார்கள். கணக்குப்படியே 39 என்றால் உண்மையில் கட்டாயம் அதற்கு மேல் இருக்கும். நிலைமை இப்படி இருக்க எல்லோரு வீட்லயும் ராமாயணமும், மகாபாரதமும் வச்சு படிக்கணுமாம்.


வீடுக்கும், படிப்புக்கும் வழி சொல்லுங்க சாமிகளா அப்புறம் இதெல்லாம் பாக்கலாம்..


இட ஒதிக்கீட்டை பற்றியெல்லாம் பேச ராமகோபாலனுக்கு போன்றோருக்கு என்ன அருகதை இருக்கிறது என்று தெரியவில்லை? இதுல மற்ற மதத்தினர் பயன் பெற கூடாதாம். என்ன நயவஞ்சகம்... ஒதிக்கீடே வேணாம்னு சொன்னவர்களுக்கு இப்பொது என்ன திடீர் பாசம், அக்கறை?. "ஆடு நினையுதேனு ஓநாய் அழுகுது.... "

அய்யா சாமி உங்கள் பாசத்தை எல்லா இந்துக்களை சரிசமாய் நடத்துவதில் காமியுங்கள் அப்புறம் அக்கறை படலாம் இட ஒதிகீட்டை பற்றி.

சேவை செய்யும்போதே உயிர் போய்விட வேண்டுமாம் (பணமுடிப்பு வாங்குனதுல உணர்ச்சி வசப்பட்டு பேசிட்டார் போல). பாவம் அவர் நினைக்கிற மாறி சாவு அவருக்கு அமையாது ஏன்னா இவர் என்னைக்கு சேவை செஞ்சிருக்கார் இனிமே செய்ய?. இவரினால் மக்களுக்கு ஒரு பிரயோஜனம் இருக்கா? ஒரு தமிழனுக்காவது இருக்கா? மெச்சுற மாறி உதவின்னு எதாவது செய்திருக்காரா? சுனாமி வந்துச்சு, இயற்கை அழிவுகள் பல வந்துச்சு இவரும் இவர் கட்சியும் ஒரு இடத்துல எதாவது உதவி செய்திருகிரார்களா? ஒண்ணும் கிடையாது.. இதுல சேவை செய்யும் போது உயிர் போகணுமாம்..

அய்யா சாமி உங்க திருவாயா மூடிகிட்டு இருந்து மத்தவன் உயிரை எடுக்காம இருங்க மொதல அப்புறமா நீங்க சேவை செய்யும் போது உயிரை விடுங்க, சேமியா செய்யும்போது உயிரை விடுங்க...

சமீபத்தில் ரசித்த பாடல்...

எதொச்சையாக நேற்று இப்பாடலை கேட்கநேர்ந்தது , மிக அருமையான குரல், ஹிந்துஸ்தானி சாயல் இசை, பாடல் முழுக்க இழையோடும் ராகம் எல்லாம் கலந்து என்னை முழுமையாய் ஈர்த்து விட்டது. வார்த்தைகள் தான் முழுமையாய் புரியவில்லை...

ரசிக்க மொழி எதற்கு???????

Tuesday, April 15, 2008

நாம் தமிழர்களாக இருப்பதா? அல்லது இந்தியர்களாக இருப்பதா?..

எப்போதுமே எனக்கு பிடித்த எழுத்துக்கு சொந்தக்காரர் பாமரன். நக்கலான, குசும்பாக, கிண்டல் மொழியில்,கவுண்டமணி நடையில் நறுக்கென்று பட்டு தெறிக்கும் அவரின் எழுத்துக்கள் மிகவும் ரசிக்ககூடியவை. அவரின் சில வார்த்தைகளை மறக்கவே முடியாது. உதாரணத்திற்கு பாய்ஸ் பட விமர்சனத்தில் சுஜாதாவை செவிட்டில் அடித்த "விஞ்ஞான வெண்ணெய்" வார்த்தை.
அவரின் எல்லா கட்டுரைகளும் என்னை கவர்வது மட்டுமல்லாமல் என் மன ஓட்டங்களுக்கு ஏற்றதாகவும், சில நேரம் உணர்ச்சி ஊட்டுவதாகவும் , நான் எழுத நினைத்து போலவும் இருக்கும். ஒரு விசயத்தில் கூட எனக்கு அவர் எழுத்துகளில் மாற்று கருத்து வந்ததில்லை (போகிற போக்கில் "அவர் பேனா எழுதுதானு சோதிக்க எதாவது கிறுக்கி இருந்தாலும்" அதையும் ரசிக்கும் நிலைமையில் இருக்கிறேன்).

மேல இருக்கும் எழுத்துக்களும் அந்த வகையை சார்ந்ததுதான்.

Monday, April 14, 2008

தேசியத்தை விட கர்நாடக மாநில நலனே முக்கியம்- தேசிய கட்சியின்(பா.ஜ.க) தலைவர் எடியுரப்பா பேட்டி...

According to you, what is the central issue at Hogenakkal?
There is a long standing dispute between our state and Tamil Nadu on Hogenakkal. We had agreed to a joint survey to settle the territorial question. Before such a survey could take place, Tamil Nadu announced the drinking water project at Hogenakkal. For any project to take place, don’t you need approvals? Clearance from the environment ministry, the Centre?
Tamil Nadu obtained clearance from the Centre in 1998. Karnataka gave the go-ahead based on TN’s clearance of the Bangalore drinking water supply.
I am not aware of this. I don’t think that this is true.
Are you suggesting that Tamil Nadu went ahead without the Centre’s approval?
I am not aware of any clearance being granted.
There are official papers available... the NDA government was in power in 1998.
As far as I know, these are rumours created to mislead people and malign the BJP — where are the papers to prove this? Why isn’t the Centre producing this as evidence? If Tamil Nadu says it has all the documents, let them show it to us.
Why did you go to Hogenakkal?
I only went there to understand the issue better.The controversy and the violence started with your visit.Did I make any inflammatory statements? I only went there and came back. Why did Karunanidhi react in that manner? It was unnecessary for him to talk the way he did. But I am against any tensions being created between the people of the two states.
So you are not responsibile for the violence in Bangalore?
I blame the UPA government for this mess now. They should call the representatives of both states and sit down for a discussion immediately. Instead they are just letting the controversy grow. Karnataka is under President’s Rule. The prime minister should call the governor and Karunanidhi.
You didn’t anticipate these kinds of reactions?
Do you ever know what lies in the future? Did Karunanidhi expect such a reaction? Of course I didn’t expect this.
Your visit seemed like it was an election gimmick.
Timing is not the issue. I will go anywhere to raise issues concerning the people of the state.
Why didn’t you visit the place earlier?
I didn’t go earlier because it was not an issue earlier. They laid the foundation stone (on February 26) without consultations and that’s how the controversy started.
Are you saying that you didn’t have the elections in mind?
That’s ridiculous. Remember that when I went, the elections hadn’t been announced.The dates weren’t, but everyone knew elections were in May, Election Commission had made clear statements...As far as I am concerned it could have been announced in September or October. To return to the issue, violence erupts every time tensions are created between the two states. In September 2007, Sangh Parivar activists torched a Tamil Nadu state bus and burnt alive two people.
This was after Karunanidhi’s statements, he should be conscious of the problems he creates. I don’t want to talk further about this.
L. Ganeshan, president of the BJP’s Tamil Nadu unit, condemned your visit to Hogenakal.
Everyone will place their state’s interests first.
But the BJP is a national party...
For me, Kannadigas are important. My state will always come first. It is the same with him.

நன்றி- தெகல்கா.காம்

என்ன கொடுமை இது, இரண்டு உயிர்களை எரித்ததை கண்டிக்காமல் கருணாநிதி பேசியதை தவறு என்கிறார்..இவர் இப்படி பேசியதற்கு இரண்டு கன்னடியரை தமிழகத்தில் எரித்தால் சரி என்று சொல்வாரா?..தமிழன் இந்தியனாய் இருக்கும்வரை அவன் உயிர் மயிர் தான் என்பதை மீண்டும் உறுதிப்படுத்தி இருக்கிறார்.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒவ்வொரு கொள்கை வைத்து மாக்களை ஏமாற்ற இரட்டை வேடம் போடும் தேசிய கட்சிகளின் கோர முகத்தையும் கடைசி கேள்வியில் காட்டி இருக்கிறார்...
ஒட்டு பொறுக்கிகளின் ஏமாற்று வேலையின் உச்சகட்டம் தான் இந்திய தேசியம், நாம் எல்லாம் இந்தியர், தேசிய நலன் போன்ற போலி சித்தாந்தங்கள் என்பதையும் தமிழ் தேசிய மலர்ச்சியே தமிழர்களின் விடிவு என்பதையும் தமிழன் இப்போவேனும் உணரவேண்டும்.

வைகோவின் ஒசலோ கர்ஜனை...











தொலைந்த வைகோவின் உண்மை முகம் ஒசலோ மாநாட்டில் மீண்டும் வெளிபட்டத்தில் மகிழ்ச்சி கொள்கிறது தமிழினம்... இந்த இந்த இந்த வைகோ தான் வேண்டும் தமிழனுக்கு...

வைகோவே,

ஈழநாடு பற்றி உணர்ச்சிபூர்வமாய் பேசிவிட்டு மீண்டும் கொடநாடு பற்றி பேச கிளம்பாதீர்கள்...

மறதமிழ் புலிகளின் வீரவணக்க கூட்டம் பேச வேண்டிய நீங்கள் மானம்கெட்ட தடிச்சிகளின் பிறந்தநாள் கூட்டம் பேசலாமா?

கொள்கைக்காய் உயிர் கொடுப்போரை உறவாய் வைத்துக்கொண்டு, கொள்ளை கும்பலுடன் உறவாடலமா?

"சூரிய" வெயிலின் சூடுக்காய் சாக்கடை பொந்துக்குள் ஒளியலமா?

போர்களத்து புலி போயஸ் தோட்டத்து புல்லாய் மாறலாமா?....

பிரபாகரன் படத்தில் இருப்பது என்ன?- தமிழர் சீமான் பேட்டி...

seemaan interview to Tamil natham
seemaan interview ...
Hosted by eSnips

தமிழ் நாதம் இணைய வானொலிக்காக தமிழின உணர்வாளர் அண்ணன் சீமான் அளித்த பேட்டி.

Sunday, April 13, 2008

அகதியாகி போன அன்னை... இடி வாங்கிய இருதயநாதர்....

நன்றி - தமிழீழ தேசிய தொலைகாட்சி...

பௌத்த சிங்கள இனவாத அரசின் இழிவான, பேடிதனமான போறேடுப்பினால் மடு மாதா ஆலயம் தாக்கப்பட்டு இன்றைக்கு அன்னையே அகதியாய் நிற்கிறாள். மாதாவோடு சேர்ந்து மடு பிரதேசத்திலிருந்து 12,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ளனர். அவர்கள் அனைவரும் மடுவுக்கு வடக்காக ஏ-32 வீதியில் மன்னார்- பூநகரி நெடுஞ்சாலையை அண்மித்த கிராமங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். தமிழின அழிப்பில், பண்பாடு அழிப்பில், மொழி அழிப்பில் ஈடுபடும் பௌத்தத் அரசின் உண்மையான கோர முகம் மீண்டும் இப்போது நடந்த ஆலய தாக்குதலால் வெளிப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து போர் விதிகளை மீறி ஆலயமீதும், பாடசாலைகள் மீதும் சிங்கள இராணுவம் தாக்குதல் தொடுத்துக்கொண்டே வருகிறது. யாழ் நூலகம் ஆரம்பித்து செஞ்சோலை தொடர்ந்து இன்று மடு மாதா ஆலயம் வரை சொல்லி கொண்டே போகலாம். கண்டதுக்கெல்லாம் குரல் கொடுக்கும் சர்வதேச சமூகம் இதற்க்கு வாய் மூடி அமைதியாய் இருப்பது ஏன்?

சமய ஒற்றுமை, சகோதரத்துவம், சோசலிசம் பேசும் இந்தியா இதற்க்கு வாய் மூடி இருப்பது ஏன்?... சிறுபான்மையினரின் காவல், மதசார்பற்ற அரசு என்று கூவி ஒட்டு வாங்கும் கட்சிகள் எங்கே போனார்கள்?
எங்கே போனது நடுநிலைமை?.
எங்க போனது மத கோட்பாடு?..
எங்க போனது நியாயகுரல்கள்?..
சரி இவர்களை விடுவோம் கிருஸ்துவர்களின் தலைநகரம் வாடிகனில் இருந்து கூட கண்டன குரல் வரவில்லையே ஏன்?. மதவையும் கிறிஸ்துவை வைத்து பொழப்பு நடத்துவோர் கூட எதிர்த்து பேசவில்லையே ஏன்?

ஓட்டுக்கும், பொழப்புக்கும் மட்டும்தான் மதமா?.

தடுக்க முடியாத மக்களின் எழுச்சி...

நேபாளத்தில் மன்னராட்சிக்கு முடிவுகட்டி முழுமையான ஜனநாயகத்திற்கு வித்திடும் புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கவுள்ள தேச சட்டப் பேரவையை தேர்வு செய்யும் தேர்தலில் மாவோயிஸ்ட் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது.

நேபாள தேச சட்டப் பேரவைக்கு மொத்தமுள்ள 240 இடங்களில் இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 181 தொகுதிகளில் மாவோயிஸ்ட் கட்சி 101 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. மாவோயிஸ்ட் கட்சியின் தலைவர் பிரசண்டா தலைநகர் காட்மாண்டு தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் பிரதமர் கிரிஜா பிரசாத் கொய்ராலாவின் நேபாள காங்கிரஸ் கட்சி 31 இடங்களிலும், நேபாள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 15 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.மாவோயிஸ்ட் கட்சி அருதிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியைப் பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நேபாளத்தில் 240 ஆண்டுகளாக நீடித்த மன்னராட்சிக்கு முடிவுகட்டும் இத்தேர்தலில் மன்னராட்சிக்கு ஆதரவான கட்சிகள் படுதோல்வியைச் சந்தித்துள்ளன. முடிவுகள் அனைத்தும் வெளிவருவதற்கு 10 நாட்கள் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.
நன்றி - தமிழ்.வெப்துனியா.காம்

உலகளவில் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்திய செய்திகளில் இந்த செய்தியும் ஒன்று என்பதில் ஐயமில்லை. இது வரை ஆயுத போராளி குழுக்களாய், பயங்கரவாதிகளாய் ஊடகங்களாலும், வல்லாதிக்க சக்திகளாலும் சித்தரிக்கப்பட்ட மாவோயிஸ்ட்கள் இன்றைக்கு மக்கள் சக்தியில் உருவான எழுச்சியின் துணையோடு ஆட்சியை அமைக்க போகிறார்கள். மக்கள் நலனில் நாட்டமில்லாத எந்த ஆட்சியும், அரசாங்கமும், அரசபைகளும் வெகுநாள் நீடிக்க முடியாது என்பதற்கும், மக்கள் நன்மைகாய் இயங்கும் ஆயுத போராளிகள் எல்லாம் பயங்கரவாதிகள் அல்ல என்பதற்கும் மற்றுமொரு சாட்சி.

இந்த வெற்றியால் உலகநாடுகள் மத்தியில் மாவோயிஸ்ட் மேலிருந்த பார்வை கொஞ்சம் கொஞ்சமாய் மாற போகிறது. அமெரிக்காவிற்கான நேபாள தேர்தல் பார்வையாளர் முன்னால் அதிபர் ஜிம்மி கார்டர் விடுத்துள்ள அறிக்கையில் "அமெரிக்கா தன்னுடைய போக்கை மாற்றி மாவோயிஸ்ட் களுடன் உறவுகளை மேற்கொள்ளும் என்றும், இதுவரை உறவு வைக்காதது தவறு" என்றும் குறிப்பிட்டுள்ளார். தவறான வெளிநாட்டு கொள்கையால் நேபாள ஆதிக்க சக்திகளுக்கு துணைபோன இந்தியா போன்ற நாடுகளுக்கு இது பெருத்த அடி...இபோதாவது இந்தியா தன் அண்டை நாடுகளுடான தவறான வெளியுறவு கொள்கைகள் தவறு என்பதை அறியவேண்டும்.

"இலட்சியத்தால் ஒன்றுபட்ட எழுச்சிகொண்ட மக்களை எந்த ஒரு சக்தியாலும் ஒடுக்கிவிடமுடியாது..." என்ற தமிழ் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் கூற்று மீதும் நிரூபிக்கப்பட்டுள்ளது, இதே மக்கள் எழுச்சி தான் தமிழீழ போராட்டத்தை முப்பது ஆண்டுகளாய் அதே தீரத்துடனும், வீரத்துடனும், ௧௮000 போராளிகளை களபலி குடுத்தும் இன்று வரை எந்த நாட்டின் உதவியும் இல்லாமல் மக்களின் உதவிடன் மட்டும் நடந்து வருகிறது. இந்த எழுச்சி நிச்சியம் ஒரு நாள் தமிழீழத்தை உருவாகியே தீரும்.
அகவே இப்பொதைய நிகழ்வை கருத்தில் கொண்டு இந்தியா மற்றும் ஏனைய சர்வதேச சமூகம் இலங்கையுடனான வெளியுறவு கொள்கையை திருத்திக்கொண்டு, மக்கள் ஆதரவு யார்க்கு, மக்களுக்கான தலைமை யார் என்பதை புரிந்து அவர்களை நோக்கி ஆதரவுகரம் நீட்ட வேண்டும். விடுதலை புலிகளை அங்கரித்து அவர்களுடன் உறவுகளை வகுத்துகொல்லவேண்டும் இல்லையேல் இப்போது விழுந்தது போல் மற்றும் ஒரு அடி விழும் என்பது உறுதி.

Friday, April 11, 2008

என் மகள்...தீவிரவாதி....






படத்தை பற்றிய விவரங்களுக்கு http://www.snitt.no/ தொடுக்கவும்...


பெண் கரும்புலிகள் பற்றிய ஆவணப்படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல்
[வெள்ளிக்கிழமை, 11 ஏப்ரல் 2008, 06:45 பி.ப ஈழம்] [செ.விசுவநாதன்]


தமிழீழ விடுதலைப் புலிகளில் இரண்டு பெண் கரும்புலிகள் பற்றிய ஆவணப்படத்தின் தயாரிப்பாளருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
"அமெரிக்காவில் துர்காமில் நடைபெறும் ஆவணப்படவிழாவில் "மை டோட்டர் த ரெரறிஸ்ட்" என்ற இரு பெண் கரும்புலிகள் ஆவணப்படத்தை வெளியிடுவதனைத் தடுப்பதில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்த நிலையில் ஆவணப்படத்தின் இயக்குநருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக நோர்வே நாளிதழ் தெரிவித்துள்ளது.


புகழ்ச்சுடர் மற்றும் தர்சினி ஆகிய இரு பெண் கரும்புலிகளின் நாளாந்த வாழ்க்கையையும் மன உணர்வுகளையும் தர்சிகாவின் தாயார் குறித்தும் சித்தரிக்கக்கூடிய ஒரு ஆவணப் படம் இது. நோர்வே நாட்டின் கருத்து சுதந்திரத்துக்கான அமைப்பின் ஆதரவுடன் இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.


சிறிலங்காவுக்குச் சென்றிருந்த ஆவணப்படத்தின் இயக்குநர் பேத்தே ஆனெஸ்தாத், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் அனுமதியின்றி தமிழீழ விடுதலைப் புலிகளின் பகுதிக்குச் சென்றதாக அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் குற்றம் சாட்டியிருந்தது.


ஆனால் கருத்துச் சுதந்திரத்தை அனுமதிக்காத அரசாங்கத்திடம் கேட்க வேண்டிய தேவையில்லை என்றும் அதே நேரத்தில் நோர்வேத் தூதரகம் எமக்கு அனுமதி அளித்திருந்தது என்றும் இயக்குநர் பேத்தே ஆனெஸ்தாத் பதிலளித்திருந்தார்.

நன்றி - புதினம்.காம்

தமிழ்நாட்டில் பிரபாகரன் பட இயக்குனரை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்த உலகமகா ஞானிகளும், நியாயபுலிகளும் இதற்கும் கண்டனத்தை தெரிவிக்க வேண்டும். ஆனால் கண்டிக்க மாட்டார்கள். தமிழ் படைப்பாளிகளின் கருத்து சுதந்திரம் பற்றி கவலைப்படாத ஆனால் தமிழனின் எதிரிகளின் கருத்து சுதந்திரத்திற்காக காட்டு கத்து கத்துவார்கள். ஏனென்றால் தமிழனின் எதிரிகள் தான் அவர்களுக்கு நண்பன், ஹிந்து ராம்களும், நாராயணன்களும், சிவசங்கர் மேனன்களும் போட்டு குடுத்த பாதை அது. அதை விட்டு எப்படி வரமுடியும்?. இவர்களுக்கெல்லாம் நடுநிலைவாதிகள் என்ற வேடம் வேறு... என்னத்தை சொல்ல... தமிழ்நாட்டுக்கு வந்த சோதனை...

பெரியார் சொன்னது உண்மைதான்... உண்மையான பார்ப்பானை கூட நம்பலாம் ஆனால் இந்த மாறி முற்போக்கு வேடம் போடும் பார்ப்பானை நம்பவே கூடாது என்று...

இறைவனின் தவறை திருத்துவோம்.

அரவாணிகளுக்கு நல வாரியம் அமைப்பு - கருணாநிதி அறிவிப்பு


சென்னை: அரவாணிகளுக்கென தனி நல வாரியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக நலத்துறை அமைச்சர் இதன் தலைவராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜனவரி 23ம் தேதி தமிழக சட்டசபையில் இடம் பெற்ற ஆளுநர் உரையில் அரவாணிகளுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.அதன்படி தற்போது தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் எனும் புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது.
நன்றி - தட்ஸ்தமிழ்.காம்

The Rationing of RightsTamil Nadu’s recent addition of a third gender column on ration card applications is one of a series of much needed, progressive reforms that benefit hijras்.

DISCRIMINATED AGAINST and forced to live in secluded communities, India’s hijras have always had to fight for basic entitlements. Two weeks ago, however, a major victory was achieved when Tamil Nadu added a third gender to ration cards. Hijras may now enter a ‘T’ (for transgender) in place of a ‘M’ or ‘F’ on ration cards. The move makes Tamil Nadu the first Indian state to officially recognise its hijra citizens.The new rule is cause for great joy. “The government has now recognised us as a third gender. It gives us much needed dignity in society,” says Noori, an HIV positive hijra, head of the South India Positive Network in Chennai. While an alphabet on a ration card may seem like a benign technicality, for Tamil Nadu’s estimated one lakh hijras (known locally as aravanis) it is a significant achievement. Ration cards, voting forms and passports have been available for aravanis only after a great deal of struggle. Ignorant administrators would leave the gender category blank, merely entering kuduma thalaivar (head of family) or, more often, ‘male’. “It is a positive development which will encourage more aravanis to openly declare themselves as transgenders,” says Jeeva, who heads the Transgenders Rights Association. Jeeva got her card in 2006, where she is referred to as kuduma thalaivar but her associate Shabina Francis is identified as ‘female.’

Historically, Tamil Nadu has had a very visible aravani community and, more recently, very vocal aravani activists. An aravani festival is held in the town of Koovagam annually, with a highly competitive “Miss Koovagam” beauty contest. Recently, it has been home to India’s first transgender television star, Rose.Yet, being hijra affects citizenship. Rose says, “It’s only been three or four years that ‘trans people’ have started asking for identity cards. Even now when we go and ask for IDs they don’t have a proper system to scrutinise our applications. Take my case. I wanted to change from a male name to a female one and retain the gender ‘M’ on my passport. If you want to change your gender on your passport, you need to have a sex reassignment surgery and I haven’t done that. For nine months my application was frozen because they didn’t know what to do.”

“We had initial success when passports with an ‘E’ (for eunuch) began to be issued two or three years ago,” says Arvind Narrain of the Alternative Law Forum, Bangalore. This raises a thorny issue. ‘Eunuch’ is used to describe a castrated man, a category most aravanis do not fit into. More to the point, the word is usually used derogatorily, so the official sanction of the category is a backhanded success.Laxmi Narayan Tripathi of Mumbai NGO Astitva says, “They first wrote male on my passport, then I argued and they put ‘E’ for eunuch, but that’s not right because I am not castrated.” However, after a long battle Laxmi succeeded. “Now they have put ‘TG’ (third gender) on my passport. In TG, everybody fits! Males, females, gays, bi-sexuals, women with alternative sexualities…” says an enthusiastic Laxmi.

RECOGNITION OF a third gender is a human rights issue. “The ration card is proof that you are a citizen,” says Reginald Watts of Bangalore NGO Sangama. “That’s one of the things you are asked for when opening a bank account, passport or driver’s license… anything.” Recent changes in Tamil Nadu are a result of relentless activism by the aravanis but other states lag far behind. “At a national level the movement still has a long way to go,” says Delhi gay rights activist Rahul Singh, “but this is a big step; other states should learn from this.”“Kerala, for example, is so violently oppressive that you don’t see transgenders. They have to run and hide, live disguised as men,” gripes Rose. “We have a visible population in Maharashtra, Delhi and a few other states but the others have a long way to go.” A lot needs to be done before hijras obtain equality. “Transgenders have been part of this culture for centuries. Whenever you pick up a religious book, we are mentioned. But today we are treated as nothing. The government talks of adivasis, tribals, but where are we mentioned?” asks a passionate Laxmi. The repealing of Article 377, often used as an excuse to harass hijras, is an issue which must be addressed, as must the right to education. “The government should follow Article 14 which talks about the right to education regardless of gender. Education gives you the ability to fight discrimination,” says Laxmi.

Again, Tamil Nadu, and the dmk government in particular, has been considerably enlightened. In 2006, its Department of SocialWelfare passed a landmark order stating that “admission in schools and colleges should not be denied based on sex identity.” The department had warned of “suitable disciplinary actions” in case of violations. “District collectors have been instructed to conduct special grievance days for aravanis once in three months,” says Asha Bharathi of Thamizhnaadu Aravanigal Association. The Department of Social Welfare recently announced plans to form a welfare board to implement education and health schemes foraravanis — again a first.The rest of India needs to catch up with Tamil Nadu. Even the Constitution only guarantees rights to men and women, leaving out hijras. “After the British were forced out everyone got independence except us. It is necessary that all sexual minority groups come together and fight for their rights,” exhorts Laxmi.With inputs from PC Vinoj குமார்

நன்றி - தெகல்கா.காம்

என் சக மனுசிகளின் வாழ்கையில் விளகேற்ற வழிவகுத்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கு கோடான கோடி நன்றிகள். அன்பை போதிக்கும் கடவுள் பக்தர்களும், உலக மகா மேதாவிகள், மகாத்மா வழிவந்தவர்கள், என தம்பட்டம் அடிப்போரும் செய்யாத காரியத்தை நம் முதல்வர் செய்திருக்கிறார்.
இறைவன் இழைத்த தவறை திருத்த முயன்றிருக்கிறார் பெரியாரின் சீடன். வாழ்க நீ எம்மான்...