Saturday, February 28, 2009

ஞானியிடம் கற்ககூடாதது...

சென்ற வார குமுதத்தில் பேச பொருளை பேச துணியும் ஞானி 'ரஹ்மானிடம் கற்போம்' என்ற தலைப்பில் ஒ பக்கத்தில் ரஹ்மானை பாராட்டி எழுதுகிறேன் பேர்வழி என்று பேசக்கூடாத பொருளை பேசி தொலைத்து இருக்கிறார்... ரஹ்மானிடம் கற்பதற்கு நிறைய விஷயம் இருக்கிறது மாற்று கருத்து இல்லை... அவரை புகழ்வதிலும் மாற்று கருத்து இல்லை.. இன்னும் கூட புகழலாம்... முழுத்தகுதியானவர் அவர்..

நம் பிரச்சனை அதுவல்ல... ரஹ்மானை புகழும் சாக்கில் இளையராஜாவை தேவையில்லாமல் இழுத்து கேவலப்படுத்தி இருக்கிறார்...ஒருவரை புகழும் போது மற்றவரை ஒப்பிட்டு இகழக்கூடாது என்ற இங்கிதம் தெரியாமல் எழுதி இருக்கிறார் அஞ்ஞானி... தெரியாமல் எழுதிருக்கிறார் என்று சொல்ல முடியாது எல்லா உலக வியாகியானங்களும் தெரிந்தவருக்கு இது தெரியாதா???.. அக தெரிந்தே எழுதி இருக்கிறார்...

அரசியல்வாதிகள் தரம் தாழ்ந்து விமர்சனம் செய்கிறார்கள் என்று அவர்களை குற்றவாளி கூண்டில் நிறுத்தும் உத்தமர் ஞானியார் இன்று அதே குற்றவாளி கூண்டில் நிற்கிறார்..

சரி எழுதியவர் இளையராஜாவின் இசையை விமர்சனம் செய்திருக்கலாம்... அவரின் பாடல்களை விமர்சித்து இருக்கலாம்... அதை விடுத்து அவரின் சொந்த வாழ்கையின் சில செயல்களையும், அவரின் ஆன்மீக வாழ்க்கையையும் விமர்சித்திருக்கிறார் இந்த கருத்துரிமை நாயகன் ஞானி... அவரது ஆன்மிகம் நடிப்பாம்... அதை வைத்து பணம் சம்பாதிக்கிறாராம் இளையராஜா... என்ன கண்டுபுடிப்பு பாருங்கள்...

என் பாட்டு என் பாட்டு நெஞ்சில் இருக்கும் பூங்காத்து, ராஜா ராஜாதி ராஜன் இந்த ராஜ என்று வரும் இளையராஜா இசையமைத்த பாடல்கள் அவரின் புகழை பரப்புப்ப அவர் செய்த வேலை என்கிறார் தன்னை தானே ஞானி என்று பட்டம் சூடி கொண்ட 'ஷங்கரன்...' மன்னிக்க'....சங்கரன்'...

கர்வம் இல்லாதவராம் ரஹ்மான்... மகிழ்ச்சி... அதை சுட்டிக்காட்டும் ஞானி கூடவே இளையராஜாவின் தலைகனத்தையும் சுட்டிக்காட்டுகிறார்... இதை விட அசிங்கமான பாராட்டு ரஹ்மானுக்கு யாரும் குடுத்திருக்க முடியாது...


ரஹ்மான் தான் அவருடன் வேலை பார்த்த இசை கலைஞரை முன்னிலை படுத்தியவராம் இளையராஜா அப்படி செய்வதில்லையாம்... தமிழ் திரை படங்களில் இசையை முன்னிலை படுத்தியதே இளையராஜா என்பதை தெரிந்ததே மறந்துவிடுகிறார்.. மறைத்துவிடுகிறார்...


ரஹ்மான் எப்படி வெறுப்பை விடுத்து அன்பை தேர்ந்தெடுத்தாரோ அதே போல் இளைஞர்களும் அன்பை தேர்தெடுக்க அறிவுரை கூறி இருக்கிறார். அந்த அறிவுரையை முதலில் அவர் தான் பின்பற்ற வேண்டும்... இளையராஜா என்ற கலைஞன் மேல் இருக்கும் தனிப்பட்ட வெறுப்பை அவர் முதலில் விடுக்க வேண்டும்...


இந்த நாளுக்காக பல நாள் காத்து இருந்திருக்கிறார் போல ஞானி, அவர் எழுத்துகளில் தெரியும் வஞ்சகம் அதை நன்றாக காட்டுகிறது...


இதற்க்கு காரணம் ஞானியின் மனதில் என்றும் இருக்கும் ஆதிக்க சாதி மனோபாவம் என்று நான் கூறினால் ஞானியின் ஞானகுஞ்சுகள் என்னோடு சண்டைக்கு வருவார்கள் அகவே நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்... நண்பர்களே...

ஒன்று மட்டும் நண்பர்களே, இளைஞர்களே... நாம் ரஹ்மானிடம் அன்பு செலுத்துவதை கற்கிறோமோ இல்லையோ ஞானியின் இந்த தனிமனித வெறுப்பை, ஆதிக்க புத்தி மனோபாவத்தை, ஒருவரை பாராட்டும் பொது இன்னொருவரை தரம் தாழ்ந்து விமர்சிப்பதை நாம் கற்க கூடாது...அது தான் சாரம்..

7 comments:

Senthil said...

Very Much True


Senthil, bahrain

Dhamodharan Raman said...

Yes...I agree with you....

Anonymous said...

you are absolutely correct....

nowadays i stopped reading kumudham and that so called idiot gnani.......

Renga said...

I appreciate that you have recorded this... I subscribed your views.. I don't know why few people in Tamil Nadu always wanted to compare and analyze.

Now come to Gnani's view.. in my opinion his recent comments about Karunanithi & Ilaiyaraja is showing his jealous about others. He has chosen to be a cine / political critic and now he is jealous about others' growth...

Satheesh Kumaran said...

Gnani is not writer he good for nothing, He is some kind of animal. I read his article in kumudam. It is one of worst apperception, every given to Rahman. He doesn't know how to wish a person. same thing happen in Mozhi hundred day function on that day he got noise attack from director Ameer. Now he getting noise attack from you brother.

I don't know how tell or scold this Gnani. He is worst (billion time or even infinite time) worst .
he is not writer he is some thing ...................... fill what ever you like

ஒருவரை புகழும் போது மற்றவரை ஒப்பிட்டு இகழக்கூடாது என்ற இங்கிதம் தெரியாமல் எழுதி இருக்கிறார் அஞ்ஞானி...

This is the base.He doesn't know the basic. Then how can he say he is an writer.
for this reason I m totally aganist that idiot,loosu gnani.
Gnani oru .....
Sorry Brother I got little bit emotion while writing this comment.

If i any one support that Idiot Gnani and scold you for this blog . just show my comment brother . what you said is true.


I will give full support to you brother.

Suresh said...

Super article thaliva, today rahman told not to compare him and raja, he told its been hurting if somebody tells bad about raja and praises him.

Suresh said...

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.