Monday, January 26, 2009

எங்கடா போனிங்க...

எங்கடா போனிங்க மனிதம் பேசுற மஹாத்மாக்களே...
எங்கடா போனிங்க அமைதி நிலைநாட்டும் ஆன்மாக்களே...
ஓர் சிங்கள பத்திரிக்கையாளனை கொலை செய்த உடன் கொதித்து போராடிய நல் உள்ளங்களே, எங்கள் உயிர்கள் அனாமத்தா போகும்போது எங்கடா போனிங்க..??
குழந்தைகள் நோயினால் கூட சாகக்குடாதுனு பல மருத்துவ திட்டம் வச்சிருக்கிற மாந்த நேயமிக்க நாடுகளே.. உங்க கண்ணுக்கு பிஞ்சு குழந்தைகள் கூட புலியா தெரியுதாடா?..
உலகெங்கும் மனித உரிமை பேசுகிற மானமுள்ள அறிவாளிகளே...அங்கே நசுக்கப்படும் குரல்வளையை பத்தி எந்த கவலையும் இல்லையா உங்களுக்கு..
எல்லா நாட்டு விடுதலைக்கும் ஓடி ஓடி போய் குரல் குடுக்குற நவீன சே குவேரக்களா... இபோ எங்கடா போனீங்க?..
காசாக்கு குரல் குடுக்குற கனவான்களே.... எல்லா உசுரும் போன பிறகு பால் ஊத்த தான் வருவீங்களாடா?.

போங்கடா நீங்களும் உங்க மனித நேயமும்...


0 comments: